சென்ட்ரல் மெட்ரோவில் மெகா ‘புத்தக பூங்கா’!
சென்னை, ஜூன் 4- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பயணம் செய்பவர் களின் அறிவு தேடலை பூர்த்தி செய்ய வும், வாசிப்புத்திறனை மேம்படுத்த வும் 5,100 சதுர அடியில் பிரம்மாண்ட வசதிகளுடன் கூடிய புத்தக பூங்காவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தப் பூங்கா விரைவில் பயன் பாட்டிற்கு கொண்டு வரவும், மக்கள் இதனை பயன்படுத்துவதை தொடர்ந்து, பிற மெட்ரோ ரயில் நிலை யங்களிலும் விரிவுபடுத்தவும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழகம் திட்டமிட்டுள்ளது. பொதுமக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேலும் விரிவுப்படுத்தவும், அவர்களுக்கு விருப்பமான அனைத்து புத்தகங்களும் எளிதில் கிடைக்கும் வகையில் புத்தகப் பூங்கா ஒன்றை மாநில அரசு திருச்சி, மதுரைக்கு அடுத்தபடியாக சென்னையில் திறக்க உள்ளது. ரயிலில் பயணம் செய்ப வர்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் பயன்பெற வசதியாக 5,100 சதுர அடி யில் இப்புத்தகப் பூங்கா அமைக்கப் பட்டு வருகிறது. இந்த பூங்கா நூல கத்தில் 10,000 புத்தகங்கள் வரை இடம் பெறும் என கூறப்படுகிறது. இந்தப் புத்தகப் பூங்காவில் அக ராதி, அரசியல், இலக்கியம், கல்வி யியல், இயற்பியல், வேதியியல், கணித வியல், தாவரவியல், விலங்கியல், உடல் செயலியல், உயிரியல், வேளாண்மை, மருத்துவம், பொருளா தாரம், பன்னாட்டுப் பொருளாதாரம், வணிகவியல், தமிழ் வரலாறு, உலக வரலாறு, இந்திய வரலாறு, இங்கி லாந்து மற்றும் ஐரோப்பிய வரலாறு, நில வியல், மனையியல், சமூகவியல், உளவியல், வானியல், நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், உயர்கல்வி நூல்கள், கீழடி தொடர்பான நூல்கள், செவ்வியல் நூல்கள், சிறார் நூல்கள், கதை, கவிதை உள்ளிட்ட பல்வகை நூல்கள் இடம் பெறும். பள்ளி மாண வர்களுக்கான தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழகத் தால் அச்சிடப்படும் பாடப்புத்தகங் களும் விற்பனை செய்யப்படும். மேலும் பிற புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்படும். தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம் உள்ளிட்ட அயல் நாட்டு புத்தகக் கண்காட்சிகள் மூலம் மொழி பெயர்க்கப்பட்ட பிற உலக மொழி புத்தகங்களும் இடம்பெறு கிறது. 10 விழுக்காடு தள்ளுபடி புத்தகப்பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இங்கு அரங்கு களில் தங்களின் புத்தகங்களை வைத்து விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. தற்பொழுது 14-க்கும் மேற்பட்டோர் தங்களின் புத்தகங்களை வைத்து விற்பனை செய்வதற்கு ஒப்பு தல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நூல கத்தில் விற்பனை செய்யப்படும் புத்த கங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி கட்டா யம் வழங்கப்படும். செயல்படும் நேரம் இந்த புத்தகப் பூங்கா காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல் படும். புத்தக பூங்காவுக்கு வரும் பொது மக்களுக்கு பல்வேறு வசதிகள் செய்ய ப்பட்டுள்ளன. குறிப்பாக சிற்றுண்டி யகம், வைஃபை வசதி, சிறிய அளவில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி, இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வசதியாக 75 பேர் அமரக் கூடிய வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள் ! இந்த புத்தக பூங்காவில் அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம். இதனால், அனைத்து பதி ப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஒரே இடத்தில் சந்திக்கக் கூடிய சூழல் உருவாகும். இந்த புத்தக பூங்கா விரை வில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. பூங்கா முழுவதுமாக குளிர் சாதன வசதி, கண்காணிப்பு கேமரா, கழிப்பறை ஆகிய அனைத்து வசதி களும் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழகத்தால் இந்த புத்தக பூங்கா நிர்வாகம் செய்யப்பட உள்ளது. பொதுமக்களிடம் இருக்கும் வரவேற்பை பொறுத்து பிற மெட்ரோ ரயில் நிலையங்களிலும் புத்தகப் பூங்கா அமைக்கவும் ஆலோசிக்கப் பட்டு வருகிறது என தமிழ்நாடு பாட நூல் கல்வியியல் அதிகாரிகள் தெரி வித்தனர்.