சென்னை, ஜன. 28- ஆஷா ஊழியர்களின் பணியை நிரந்தரப்படுத்தி, கால முறை ஊதியம் வழங்க வேண்டும், சுகாதாரத்துறை சார்பில் அடை யாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு சார்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ம.சுப்பிரமணியனை சனிக்கிழமை (ஜன. 28) சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் அவரால் முடிந்த கோரிக் கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக செயலர், இயக்குனர், ஆஷா ஊழியர் பிரதிநிதிகள் அனை வரையும் ஒருங்கிணைத்து கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்வ தாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதில் சிஐடியுமாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சங்கத்தின் தலைவர் டி.டெய்சி, பொதுச் செயலாளர் ஆர்.சீதால ட்சுமி, பொருளாளர் எம்.பார்வதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.