இந்தவாரம் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் மருத்துவம், இயற்பியல், வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயற்கை விஞ்ஞானத்திற் கான நோபல் பரிசில் அதிக அளவு மூலதனத்தின் வர்க்க அரசியல் பார்க்க முடியாது. இம்முறை அறிவிக்கப்பட்ட பரிசுகள் குறிப்பாக இயற்பியல், வேதியல் பரிசுகள் செயற்கை நுண்ணறி விற்காக கொடுக்கப்பட்டவை. பொதுவாக அடிப்படை விஞ்ஞான கோட்பாடுகளை உருவாக்கியவர்களுக்கும் அதை நிறுவியவர்களுக்குமே இதுவரை நோபல் பரிசுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக இயற்கை விதிகள் பற்றிய கோட்பாடுகளே நோபல்பரிசுகளை வென்றிருக்கின்றன. அல்லது இப்படி ஒரு இயற்கைவிதி இருக்கிறது என்று ஒருவர் அறிவித்து நீண்டகாலம் கழித்து அதை பரிசோதனைகள் மூலம் நிறு வியவர்களுக்கு கொடுக்கப்ட்டிருக்கிறது. ஆனால் இயற்கைவிதியை பயன்படுத்தி வேறொரு விஷயத்தை சாதித்தவருக்கு கொடுக்கப்படவில்லை. செயற்கை நுண்ணறிவு சம்பந்தமான விஷயங்கள் இந்த ஆண்டு இயற்பியல் வேதியலுக்கு வழங்கப்பட்டி ருக்கின்றன. அடிப்படை அறிவியலில் சீனா முன்னேறிச் சென்று வளர்ச்சியடைந்த நாடுகளை தாண்டிவிட்ட நிலை யில் மூலதனத்தின் லாபி இப்படிச் செய்திருக்கிறது.
இப்படிச் சொல்வதால் நோபல் பரிசு பெற்றவர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் நோபல் பரிசு பெற்ற ஹிண்டன் பேக்கர் போன்றவர்கள் அவர்கள் கண்டுபிடிப்பு தவறான வழியில் பயன்படுத்த வாய்ப்புள்ளதையும் அதன் மீதான சமூகக் கட்டுப்பாடு இறுக்க வேண்டும் என்று கூறிய வர்கள். முதன் முறையாக பொது நிதியிலிருந்து இயங்கும் கல்வி அல்லது ஆய்வு நிறுவனத்திலிருந்தும் வரும் விஞ்ஞானி கள் அல்லாமல் டீப் மைண்ட் என்ற தனியார் நிறுவனத்தின் ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. டீப் மைண்ட நிறுவனத்தை கூகுள் நிறுவனம் 400 மில்லியன் பவுண்ட் கொடுத்து 2014 இல் விழுங்கி செரித்து விட்டது. டீப் மைண்ட் இப்பொழுது ஒரு பன்னாட்டு பகாசுர நிறுவனத்தின் அங்கம்.