மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்திற்கு வந்த திமுக மற்றும் மதிமுக வேட்பாளர்கள், கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். திமுக சார்பில் திருபெரும்புதூரில் போட்டியிடும்டி.ஆர். பாலு, நீலகிரி வேட்பாளர் ஆ.ராசா, பெரம்பலூரில் முதன்முறை யாக களம் காணும் அமைச்சர் கே.என். நேருவின் மகன் கே.என். அருண்நேரு, தென் சென்னை வேட்பாளர் சுமதி என்கிற தமிழச்சி தங்கப்பாண்டியன், மதிமுக திருச்சி தொகுதி வேட்பாளர் துரை வைகோ ஆகியோர் வாழ்த்து பெற்ற நிலையில், அவர்களை மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வரவேற்றார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் ஏ. ஆறுமுக நயினார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.