திருவெறும்பூரில் மே தின பொதுக்கூட்டம்
திருச்சிராப்பள்ளி, மே 3- சிஐடியு திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் பெல் - சிஐடியு பொதுச்செயலாளர் பரமசிவம் தலைமையில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது. சிஐடியு மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம் வரவேற்புரை ஆற்றினார். அகில இந்திய செயலாளர் கருமலையான் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் சம்பத், சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், மாதர் சங்க மல்லிகா, சாலை போக்கு வரத்து செயலாளர் சிவானந்தம், தரைக்கடை தலைவர் கருணாநிதி, செயலாளர் ஆனந்த், ஆட்டோ சங்க தலைவர் நவமணி, செயலாளர் சந்திர சேகர், சிஐடியு மாவட்ட நிர்வாகி கனகராஜ், உள்ளாட்சி சங்க மகாமணி, வி.தொ.ச மாவட்ட தலைவர் தெய்வ நீதி, சிஐடியு நிர்வாகிகள் அருணன், சுரேஷ் மற்றும் பெல் - சிஐடியு நிர்வாகிகள் மாவட்டக் குழு உறுப்பி னர்கள், சிபிஎம் திருவெறும்பூர் வடக்கு மற்றும் தாலுகா செயலா ளர்கள், வட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கட்டுமான சங்கத் தலைவர் தியாகராஜன் நன்றி கூறினார். முன்னதாக, சிஐடியு மற்றும் சிபிஎம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மேதின கொடி ஏற்றப்பட்டன.