மே 23- தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் நினைவு நாள்
தமிழ்நாட்டுக்காக ரத்தம் சிந்திய தலைவர்!
ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் சிறப்புறச் செயலாற்றியவர் தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன். மெட்ராஸ் ஸ்டேட்டிற்குத் ‘தமிழ்நாடு’ பெயரிடக் கோரிப் போராடி, தடியடிபட்டு ரத்தம் சிந்தியவர். நாட்டு விடுதலைக்காகவும் மக்கள் நல்வாழ்வுக்காகவும் சிறைவாசம் செய்தவர். துப்பாக்கிக் குண்டுகள்குறிபார்த்த போதும்இயக்கத்தையே சரிபார்த்தவர். நெசவாளர்களின் துயரங்கள் தொடர்பாக அவர் எழுதிய இயக்கக் குறிப்புகள் ‘பஞ்சும் பசியும்’ நாவலின் விதைகளாயின. பொதுவுடமைக் கொள்கைக்காக கடைசி மூச்சு வரை பாடுபட்டு கம்பீர மனிதனாக உயர்ந்து நின்றவர் தோழர் எம்.ஆர்.வி. சமத்துவ சமுதாயம் படைக்க அவரது வழியில் நடைபோடுவதே கம்யூனிஸ்டுகளின் கடமை. பெரணமல்லூர் சேகரன்