சென்னை, மே 5 - உணவு உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்வோரை, தொழிலாளர் களாக அங்கீகரிக்க வலி யுறுத்தி மே 22 அன்று தமிழ்நாடு முழுவதும் ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத் தம் செய்ய உள்ளனர். ஸ்விகி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஓரு வருடமாக தொடர் போராட் டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோ கிக்கும் ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் கோரிக்கை மனு அளித்தும் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வருகிறது. இந்நிலையில், உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகம் செய்வோரை தொழிலாளர்களாக அங்கீ கரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (மே 5) தொழிலாளர் துறை ஆணையர் அதுல் ஆனந்த்தை சந்தித்து, சங்கத்தின் தலைவர் கே.சி. கோபிகுமார், பொதுச்செய லாளர் ராமகிருஷ்ணா ஆகியோர் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினர். இதன்பின் செய்தியாளர் களிடம் பேசிய ராமகிரு ஷ்ணா, “ஊதியம் வழங்க கொண்டு வரப்பட்டுள்ள புதிய முறையை ரத்து செய்துவிட்டு, பழைய முறை யிலேயே வழங்க வேண்டும், இலக்கை பூர்த்தி செய் வோருக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஊக்கத் தொகை, அனுபவம் மிக்க விநியோகிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊக்கத் தொகை ஆகிய வற்றை மீண்டும் வழங்க வேண்டும். பெட்ரோல் 50 ரூபாய் விற்றபோது போக்குவரத்து செலவாக கி.மீ 5 ரூபாய் கொடுத்தனர். தற்போதுள்ள நிலையில் அதை 10 ரூபாயாக உயர்த்த வேண்டும், ஒரு ஆர்டருக்கு 30 ரூபாயும், பேட்ச் ஆட ருக்கு 20 ரூபாயும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த வேலைநிறுத் தம் நடைபெற உள்ளது” என்றார்.