tamilnadu

img

குடிநீர் கேட்டு மாதர் சங்கத்தினர் மனு

குடிநீர் கேட்டு மாதர் சங்கத்தினர் மனு

தருமபுரி, ஜூன் 4- செங்கல்மேடு கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும், என வலியு றுத்தி மாதர் சங்கத்தினர் தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு  அளித்தனர். தருமபுரி ஒன்றியம், கோணங்கி நாயக்கனஅள்ளி, செங்கல்மேடு கிரா மத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளன. கடந்த ஓராண்டுக்கு முன்பு  பிரதமர் உதவி திட்டத்தின் கீழ் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட் டது. இந்த தொட்டியிலிருந்து குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு, இரண்டு வாரம்  தொடர்ந்து குடிநீர் வந்தது. பின் ஓராண்டு  காலமாக தொடர்ந்து தண்ணீர் வரு வதில்லை. இதனால் விவசாய கிணற் றுக்கு சென்று குடிநீர் எடுத்து வரும்  நிலை உள்ளது. கோணங்கிநாய்யன அள்ளி ஊராட்சி நிர்வாகத்திற்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. எனவே, இக்கிராம மக் களின் நலன் கருதி உடனடியாக குடிநீர்  கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும், என வலியுறுத்தி அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கத்தினர் புதனன்று  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு  அளித்தனர். இந்நிகழ்வில், மாதர் சங்க  மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா, ஒன்றியச்  செயலாளர் எம்.மீனாட்சி, நகரச் செய லாளர் நிர்மலா ராணி, நிர்வாகிகள் கே. பூபதி, கே.சுசிலா, கவிதா உட்பட பலர்  கலந்து கொண்டனர்.