tamilnadu

img

அவதூறு யூடியூபர் மீது மாதர் சங்கத்தினர் புகார்

சென்னை, ஜூலை 29 - அவதூறு காணொலி வெளியிட் டுள்ள யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சனிக்கிழமைன்று (ஜூலை 29) சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் அளித்தனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா அளித்துள்ள புகாரில்,  கள்ளக்குறிச்சியில் சந்தேகத்திற்கிட மான முறையில் இறந்த பள்ளி மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதி கிடைக்க மாதர் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இது தொடர்பாக கார்த்திக்பிள்ளை என்கிற யூடியூபர் தனது சுயலாபத்திற்காக திகே டிவி  என்ற சேனலில் பெண்களை அவதூறு,  இழிவு செய்து வீடியோ வெளியிட்டுள் ளார். குறிப்பாக, மாதர் சங்கம் மற்றும்  அதன் தலைவர்கள், உறுப்பினர்கள்,

பொது வாழ்க்கையில் ஈடுபடும் பெண் களை கீழ்த்தரமான வார்த்தைகளால் ஒருமையில் பேசியுள்ளார். சங்கத் தலைவர்களின் நேர்மையையும், நடத்தையும் கொச்சைப்படுத்தி உள்ளார். கண்ணியமற்ற வார்த்தை களின் மூலமாக தூய்மை பணியாளர் களையும், மாற்றுத்திறனாளிகளையும் இழிவுபடுத்தி உள்ளார். கோவை மற்றும் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவிகள் சந்தேக இறப்பு  சம்பவங்களில், பாதிக்கப்பட்ட வர்களை கொச்சைப்படுத்தி உள்ளார். அவர்களுடைய குடும்பத்தாரை இழிவு  படுத்தி, நடத்தையை சந்தேகித்து அவதூறு செய்துள்ளார். நீதிமன்ற வழக்கு விசாரணை குறித்து தவறான  தகவல்களை பரப்பி, வழக்கின் போக்கை திசை திருப்பும் நோக்கத்து டன் செயல்படுகிறார். இதுதொடர்பான காணொலி வெளியிட்டு சமூக வலை தளங்களில் பதிவேற்றி வருகிறார். முற்போக்கு சிந்தனையோடு, தம் வாழ்நாளை மக்களுக்காக அர்ப்பணித்து பணியாற்றிக் கொண்டி ருக்கும் மாதர் சங்கத்தினரை பற்றி அவதூறு பரப்பியுள்ளார். அடிப்படை ஆதாரமற்ற, அநாகரீகமான வார்த்தை  பிரயோகங்கள் மூலம் எங்களை இழிவுபடுத்தி, நன்மதிப்பை கெடுத்துள்ளார். எனவே, கார்த்திக்  பிள்ளை மீது வழக்கு பதிந்து நட வடிக்கை எடுக்க வேண்டும். கண்ணிய குறைவாகவும் தரக்குறைவாகவும் பேசி வெளியிட்டுள்ள காணொலிகளை சமூக வலைத்தளத்திலிருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா, மத்தியசென்னை மாவட்டத் தலைவர் வே.சாந்தி, செயலாளர் வி.தனலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.