tamilnadu

img

ஆளுநர் மாளிகை அருகே மாதர் சங்கம் போராட்டம்

சென்னை, மார்ச் 20 - இணையதள சூதாட்டங்களை (ஆன்லைன் ரம்மி) தடை செய்யும் தமிழ்நாடு அரசின் மசோதாவை அண்மையில் ஆளுநர் திருப்பி அனுப் பினார். இதனை கண்டித்து திங்க ளன்று (மார்ச் 20) ஆளுநர் மாளிகை அருகே பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க கோரி தமிழகம் முழு வதும் ஜனவரி மாதம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். அவற்றை பிப்.1 அன்று ஆளுநர் மாளி கையில் ஒப்படைக்க வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி னர். ஆளுநரை விரைவில் சந்திக்க நட வடிக்கை எடுப்பதாக காவல்துறை யினர் உறுதி அளித்தனர். இதற்கிடையில், ஆன்லைன் ரம்மி சூதாட்டம் நடத்தும் முதலாளிகளை அழைத்துப் பேசிய ஆளுநர், மார்ச்  6ம் தேதி மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பினார். கடந்த இரண்டு  ஆண்டுகளில் ஆன்லைன் சூதாட்டத் தால்  45க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள் ளனர். ஆளுநரின் இந்த நடவடிக்கை யை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை மாதர் சங்கம் அறிவித்தது. இதன்படி, திங்க ளன்று சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே கூடியவர்களை காவல்துறை யினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச்செய லாளர் ஆர்.ராதிகா, “ஆன்லைன் சூதாட்டத் தை தடை செய்யும் அரசின் மசோதா வுக்கு ஒப்புதல் வழங்க கோரி மாதர் சங்கம் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் 1.30 லட்சம் பேர் கையெ ழுத்திட்டுள்ளனர். மக்களின் உணர்வு களை மதிக்காமல் செயல்படும் ஆளு நரை கண்டித்து இந்த போராட்டத்தை நடத்துகிறோம்” என்றார்.  “ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை மீண்டும் தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அதற்கு ஆளுநர் ஒப் புதல் அளிக்க வேண்டும்.” என்றும் அவர் வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து கிண்டி வட்டாட்சியர் பரணி, போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து மாதர் சங்கத் தலை வர்களிடம் இருந்து கையெழுத்து மனுக்களை பெற்றுக் கொண்டார். சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொருளாளர் வ.பிரமிளா, சென்னை மாவட்ட நிர்வாகிகள் எஸ். சரவணசெல்வி, ம.சித்ரகலா (தென் சென்னை), பாக்கியலட்சுமி, பூங்குழலி (வடசென்னை), சாந்தி (மத்திய சென்னை), சென்னை மாநக ராட்சி மாமன்ற உறுப்பினர்கள் எம்.சரஸ்வதி, விமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.