tamilnadu

சீமானின் கண்ணியமற்ற பேச்சுக்கு மாதர் சங்கம் கண்டனம்

சீமானின் கண்ணியமற்ற பேச்சுக்கு மாதர் சங்கம் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருமான சீமானின் கண்ணியமற்ற, பிற்போக் குத் தனமான பேச்சுக்கு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியின் தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது  திரைப்படக் கலைஞர் விஜயலட்சுமி கூறியுள்ள பாலியல் குற்றச் சாட்டுக்கு, காவல் நிலையத்தில் ஆஜ ராவது சம்பந்தமாக சீமான், செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்திருந் தார்.  அதில், பாதிக்கப்பட்ட பெண் ணின் கண்ணியத்தை குறைக்கும் வகையில், பிற்போக்குத்தனமாக, மிகவும் ஆணாதிக்க மனநிலை யோடு, மோசமாக நாகரிகமற்ற வார்த்தைகளை ஒரு கட்சியின் தலை வர் பயன்படுத்தி இருப்பது கடுமை யான கண்டனத்திற்குரியது. மேலும் பெண் எந்த வயதில் பாலி யல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டா லும், அது சட்டப்படி குற்றமே என்பது கூட தெரியாமல், ஒரு கட்சியின்  தலைவராக இருந்து கொண்டு பெண் ணின் பருவ நிலையை சொல்லி குற்றத்தை நியாயப்படுத்துவதும் குற்றமே.  முதன் முதலாக மாதவிடாய் ஏற்பட்டவர் என்றால், பெரும்பாலும் சிறுமியாகத் தான் இருக்க முடியும். சிறுமியை வல்லுறவு செய்யும் குற்றம், போக்சோ பிரிவுகளின் கீழ்  வரும். 12 வயதுக்கும் கீழுள்ள சிறுமியை வல்லுறவு செய்வது, மரண தண்டனைக்குரிய கடும் குற்ற மாகும்.

இவற்றையெல்லாம் கவ னத்தில் கொள்ளாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவது மிகப் பெரும் குற்றம். பெண்ணை தூக்கிப் போய் பாலியல் வன்கொடுமை செய்தால் மட்டுமே அது குற்றம் என்ற வகை யிலும், வேறு எவ்விதமான பாலியல்  குற்றங்களில் ஈடுபட்டாலும் அது குற்றமல்ல என்பது போன்றும் பேசி யிருப்பது சீமானின் ஆணாதிக்க சிந்த னையையும் ஆணவத்தையும் வெளிப் படுத்துகிறது.  சீமான் தொடர்ச்சியாக பல்வேறு  சமயங்களில் பெண்களை அவ மதிக்கும் வகையிலும், கண்ணியக் குறைவாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணை அச்சுறுத்தும் வகையி லும் பேசி வருவதை அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கம் வன்மை யாக கண்டிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன் முறையை மிக சாதாரணமாக பேசு வது, ஒட்டுமொத்த தமிழகப் பெண் களையும் அவமதிப்பதாகும். எனவே  பொதுவெளியில் பெண்களை மோச மாக பேசிய சீமான் மீது காவல்துறை  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் சாட்டியுள்ள பெண்ணை அச்சுறுத்தும் வகையில்  பேசி வரும் சூழலில், பாதிக்கப்பட்ட  விஜயலட்சுமிக்கு உரிய பாது காப்பை வழங்கிட வேண்டும். சீமான் மீது, பாதிக்கப்பட்ட விஜய லட்சுமி கொடுத்திருக்கும் பாலியல்  புகாரை துரிதமாக விசாரித்து  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறி யுள்ளனர்.