tamilnadu

img

காப்பீட்டுத் தொகையை உயர்த்தாதே! ஓய்வூதியர்கள் பெருந்திரள் முறையீடு

சென்னை, ஜூன் 21 - காப்பீட்டுச் சந்தா 350  ரூபாயை மேலும் உயர்த்தக்  கூடாது என வலியுறுத்தி  செவ் வாயன்று (ஜூன் 21)  சென்னையில் ஓய்வூதியர் கள் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் ஏராள மான குளறுபடிகள் உள்ளன.  அவற்றை சரி செய்ய வேண்டும். காப்பீட்டு திட்டத் திற்கு மாதந்தோறும் 350  ரூபாய் பிடித்தம் செய்யப்படு கிறது. இந்த தொகையை மேலும் உயர்த்தக் கூடாது. அங்கீகாரம் இல்லாத மருத்துவமனைகளில் பெற்ற சிகிச்சை, அங்கீ கரிக்கப்படாத நோய்க ளுக்கு பெற்ற சிகிச்சை ஆகி யவற்றிற்கான தொகையை காப்பீடு திட்டத்தின் வாயி லாக வழங்க வேண்டும். இதன்படி நிலுவையில் உள்ள 20ஆயிரம் மனுக்க ளுக்கு பணத்தை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கான்வாடி, வனத்துறை, ஊரகவளர்ச்சித்துறை, வருவாய் கிராம ஊழியர் கள் உள்ளிட்ட ஓய்வூதியர்க ளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7850 ரூபாய் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது, 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு ஓய்வூ தியத்தில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்குவது போன்ற தேர்தல் வாக்குறுதி களை அரசு நிறைவேற்ற வேண்டும்.

1.1.2022 முதல் வழங்கப் படாமல் உள்ள 3 விழுக்காடு அகவிலைப்படியை நிலுவையுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலி யுறுத்தி, கருவூல கணக்குத் துறை ஆணையர் அலுவல கம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சங்கத்தின் நிர்வாகிகள், ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் நெ.இல. சீதரன் தலைமை தாங்கினார்.  பொருளாளர் என். ஜெயச் சந்திரன் வரவேற்றார். பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி விளக்கவுரையாற்றினார். துணைத் தலைவர் கி. இளமாறன் நன்றி கூறினார்.