சேலம், ஜன. 3- ஆத்தூர் அருகே இராமநாயக்கன் பாளையத்தில் விவசாயிக்கு பாஜக பிரமுகரின் தூண்டுதலின் பேரில் அம லாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அமலாக்க துறையுடன் கூட்டுச் சேர்ந்து, விவசாயிகளின் நிலத்தை அப கரிக்க முயன்ற பாஜக பிரமுகர் குண சேகரனை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாது காப்பு அளிக்க வேண்டும் என வலி யுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கோட்டை மைதா னத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை. சண்முகராஜா தலைமையில் சேலம் கோட்டை மைதானத்தில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி, எம்.குணசேகரன், பாதிக்கப்பட்ட விவசாயி கிருஷ்ணன் மற்றும் வடிவேல் ஆகியோர் உரையாற் றினர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.