பிப்.19- முன்னாள் அமைச்சரும் திமுக வர்த்தக அணித் தலை வருமான எஸ்.என்.எம்.உப யதுல்லா உடல்நலக் குறை வின் காரணமாக ஞாயிறன்று தஞ்சாவூரில் காலமானார். அவருக்கு வயது 83. ஞாயிறன்று தமது குடும்ப விழா ஒன்றில் கலந்து கொள்ளவதற்காக புறப் பட்டுக் கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல் லப்பட்ட அவர் அங்கு மரண மடைந்தார். எஸ்.என்.எம்.உபய துல்லா 1989, 1996, 2001 மற் றும் 2006 தேர்தல்களில் தஞ் சாவூர் சட்டமன்றத் தொகுதி யில் திமுக சார்பில் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை திமுக அமைச்சரவையில் வணிக வரித்துறை அமைச்ச ராக பொறுப்பு வகித்தார். 1987-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு கட்சி யின் தஞ்சாவூர் நகர் செயலா ளராகவும், திமுக வணிகர் பிரிவுத் தலைவராகவும் இருந்தார். சமீபத்தில், தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் சமூக மேம்பாட்டில் உபயதுல்லா வின் பங்களிப்பைப் பாராட்டி 2022-ஆம் ஆண்டிற்கான பேர றிஞர் அண்ணா விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ ருக்கு வழங்கி கவுரவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
“எஸ்.என்.எம். உபய துல்லா அவர்கள் மறைவுற் றார் என்ற செய்தி கேட்டு மிக வும் வருத்தமுற்றேன். உபய துல்லா-வை இழந்து தவிக் கும் குடும்பத்தினர், உறவி னர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாகத் தேர் தல் களத்தில் இறங்கிய காலத்தில் இருந்து பேரறி ஞர் அண்ணாவின் மீதும் முத் தமிழறிஞர் கலைஞர் மீதும் பெரும் பற்றும் மரியாதை யும் கொண்டு கழகப் பணி யாற்றி வந்த திரு. உபய துல்லா அவர்கள், என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த வர். 1962-ஆம் ஆண்டு சட்ட மன்றப் பொதுத்தேர்தலில் தலைவர் கலைஞர் தஞ்சா வூர் தொகுதியில் போட்டி யிட்டபோது அவருக்காகச் சிறப்பாகத் தேர்தல் பணி யாற்றி அவரது நன்மதிப் பைப் பெற்றவர். மன்னை நாராயணசாமி, கோ.சி.மணி, தஞ்சாவூர் நடராஜன் உள் ளிட்ட ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்தலைவர்களு டன் இணைந்து கழகம் வளர்த்த தீரர்” என தனது இரங்கல் செய்தியில் முதல் வர் மு.க.ஸ்டாலின் குறிப் பிட்டுள்ளார்.
சி.பி.எம் தலைவர்கள் அஞ்சலி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் சின் னை.பாண்டியன். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா ளர் சாமி.நடராஜன், மற்றும் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு, மாநக ரக்குழு, ஒன்றிய நிர்வாகிகள் உபயதுல்லாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.