tamilnadu

நிதி ஆதாரங்களை திரட்டி மக்கள் நலத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றுக!

சென்னை,மார்ச் 18- 2022-23 ஆம் ஆண்டுக்கான தாக்கல் செய்துள்ள தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், நிதி ஆதாரங்களை திரட்டி மக்கள் நலத் திட்டங்களை விரைந்து நிறை வேற்றிட சீரிய முயற்சிகள் தேவை என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரி வித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்  செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டி;w கான நிதிநிலை அறிக்கை மார்ச் 18 வெள்ளி யன்று தமிழக சட்டப்பேரவையில், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் சமர்ப் பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை 4.61 சதவிகிதத்திலிருந்து 3.80  சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதை நிதி யமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 2019 இல் அஇ அதிமுக அரசு 10 ஆண்டுகள் தமிழகத்தின் நிதி நிலையை கடுமையான நெருக்கடியில் தள்ளி விட்டு சென்றிருந்த பின்னணியில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசு அதிலிருந்து மீண்டு வர சில சீரிய முயற்சிகள் எடுப்பதை நிதிநிலை அறிக்கை மூலம் அறிய முடிகிறது.

இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் .18 ஆயிரம் வகுப்பறை களை உருவாக்கும் அறிவிப்பு உட்பட கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு, விவசா யம், தொழில் வளர்ச்சி மற்றும் சிறு குறு தொழில் முன்னேற்றத்திற்கு என பல முன்னெடுப்பு களை திட்டங்களாகவும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்திருப்பது தேவையானது. அதேசமயம், செலவினத்தை குறைக்கும்போது, இவை அனைத்திற்குமான நிதி திரட்டல் பற்றிய ஆலோசனைகளும் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். வேளாண்மை உள்ளிட்ட முதன்மை  துறைகளுக்கு முதலீடுகள் அதிகப்படுத்தப் பட்டுள்ளன. பயிர்க்கடன், நகைக்கடன், சுய உதவிக்குழு கடன் தள்ளுபடிக்காக 4131 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அறிவித்த  தள்ளுபடிக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டிய தொகை இன்னும் நிலுவையில் உள்ளது. முழுத்  தொகையையும் கூட்டுறவு வங்கிகளுக்கு திருப்பிக் கொடுத்தால்தான் கூட்டுறவு வங்கி கள் திறம்பட செயல்பட முடியும்.

மாணவிகளுக்கு நிதியுதவி வரவேற்கத்தக்கது

அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகள் இடைநிற்றலை தவிர்க்க  மாதந்தோறும் ரூ.1000 நிதி உதவி அறிவிக்கப் பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேசமயம், மூவலூர் இராமாமிர்தம் அம்மாள்  திருமண உதவித் திட்டம் நீடிக்குமா என்கிற கேள்வி எழுகிறது. ஏழை பெண்களின் திருமணத்திற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தொடர வேண்டும். பெண்களுக்கான உதவித் தொகை ரூ.1000 விரைந்து அமலுக்கு வர வேண்டும். மாண வர்களுக்கான பஸ் பாஸ், மகளிருக்கான இல வச பயணம் ஆகியவற்றிற்காக ரூ.2448 கோடியும், மின்வாரிய இழப்பீட்டை சரிக்கட்ட ரூ.13,108 கோடியும் ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம், பஸ் பாஸ் மற்றும் இலவச பயணத்திற்கான முழுத் தொகையையும், நட்டத்தில் இயங்குகிற வழித்தடங்களுக்கான இழப்பீட்டையும் போக்குவரத்துத் துறைக்கு அளிப்பதுதான் உதவிகரமாக இருக்கும். மனிதவளம் தொடர்பாக சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான குழு ஒன்று அமைக்கப்படும் என்கிற அறிவிப்பில், அதில்  உள்ள சொல்லாடல்களை தாண்டிப் பார்க்கும் போது நிரந்தரப் பணி கட்டமைப்பை சீர்குலைத்து, பணியிடங்களை குறைத்து அவுட்சோர்சிங் முறையை வலுப்படுத்தும் நோக்கமே தெரிகிறது. அரசு சொத்துக்களை முறையாக கணக்கிட மற்றும் கண்காணித்திட மனிதவள மேலாண்மை திட்டத்துடன் இணைத்து சொத்து மேலாண்மை மென் பொருள் அறிமுகப்படுத்தப்படும் என்கிற அறி விப்பின் சில முக்கிய அம்சங்கள் விமர்சனத் திற்கு உரியதாக உள்ளன. தனியார் நிறு வனத்தின் கட்டுப்பாட்டில் பல அதிகாரங்கள் செல்வதும், கருவூலத்துறை காணாமல் போகும் அபாயமும் இதில் பிரதிபலிக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றபடி பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வருவது மற்றும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும்  ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப் படியான ஓய்வூதியம் அளிப்பது போன்ற அறி விப்புகள் நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றத்தில் ஆழ்த்துகிறது.

நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களை ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்டெடுக்க 50 கோடி  ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பல்லாண்டு களாக அதில் குடியிருந்து வரும் ஏழை குடும்பங்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவது சம்மந்தமாக எந்த அறிவிப்பும் இல்லை. நிலக்குத்தகை கொள்கை வகுக்கப்படும் என்ற அறிவிப்பில் நில விநியோகம் என்ற முக்கியமான அம்சம் இல்லாமல் போகிறது. நிதிநிலை அறிக்கையானது, கோவிட் பெருந்தொற்று நோயால் வாழ்வாதாரங் களை இழந்து தவிக்கின்ற மக்களுக்கு பண  விநியோகம் உள்ளிட்ட சில நிவாரணங் களையும், குறுகிய கால வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வுரிமை திட்டங்களையும் கொண்டு வரும் என்று எதிர்பார்த்திருந்த மக்களு க்கு அது குறித்த சிறப்பு திட்டங்கள் ஏதும்  இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.  செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்த பிரிவினருக்கான உதவித் தொகை 3000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்  என்பன போன்ற பல கோரிக்கைகள் குறித்து நிதிநிலை அறிக்கையில் இல்லை என்றாலும் மானிய கோரிக்கையின்போது அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். கூட்டாட்சி அமைப்பில் மாநிலங்களுக்கான நிதி உரிமையை ஒன்றிய அரசு சீர்குலைத்து வருவதை நிதிநிலை அறிக்கை கண்டிப்பது வரவேற்கத்தக்கது. கோவிட் தொற்றுநோய் பாதிப்பு மட்டுமல்லாமல் பொருளாதார நெருக்கடி, வறுமை, வேலையின்மை ஆகிய வற்றால் வாழ்வாதாரங்களுக்காக போராடிக்  கொண்டிருக்கக்கூடிய மக்களின் ஒருங்கி ணைந்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை  மையக்கருவாக கொண்டு நிதிநிலை அறிக்கை யின் செயல்பாட்டு திசை வழி அமைய  வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. பல நல்ல நோக்கங்களையும், முன்மொழிவுகளையும் கொண்டுள்ள 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரவேற்கும் அதே வேளையில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட நிதி ஆதா ரங்களை திரட்டும் முன்முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும். ஒன்றிய அரசாங்கத்திடம் பெற வேண்டிய நிதி அனைத்தையும் உடன டியாக கோரி பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  எதிர்பார்க்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.