சென்னை,பிப்.21- சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் உர தொழிற் சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அதிமுக, திமுக, சிபிஎம், காங்கி ரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப் பட்டது. அப்போது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மா. சின்னதுரை,“சென்னையில் இந்த கோரமண்டல் ஆலை துவங்கப்பட்ட சுமார் 60 ஆண்டுகள் கடந்து விட்டது. தற்போது, டிசம்பர் 22 அன்று அந்த ஆலையில் நள்ளிரவு நேரத்தில் விஷ வாயு கசிவு பெரும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு தலையிட்டு உரிய நிபுணர் குழுவை அனுப்பி அந்த மக்களை பாதுகாத்து பாராட்டுக் குரியது”என்றார்.
நகரமே அழியும் பேராபத்து
கடலுக்கு வெறும் 50 மீட்டர் தூரத்தில் தான் அமோனியா வாயு சேமிக்கும் தொட்டி நிறுவியுள்ளனர். ஆனால், ஏறக்குறைய 500 மீட்டருக்கு அப்பால் தான் தொட்டியை அமைக்க வேண்டும் என்று விதிமுறைகள் தெளி வாக கூறப்பட்டுள்ளது. ஆனால், கசிவு வருகிறது என்பது அரிதிலும் அரிதாக உள்ளது. அங்குள்ள சேமிப்பு தொட்டியில் ஒரே நேரத்தில் மட்டும் 90 ஆயிரம் டன் லிட்டர் அமோனியா வாயு தொட்டில் சேமித்து வருகின்ற னர். ஏதாவது ஒரு அசாதாரண சூழ்நிலையில் வாயு கசிவு ஏற்பட்டால் சென்னை மாநகரமே அழிந்து போய்விடும் அபாயம் இருக்கிறது. ஆகவே, தான் மக்கள் மிகப்பெரிய அளவுக்கு பயப்படுகிறார்கள். ஒரு நாளைக்கு 90 ஆயிரம் டன் சேமிக்க வேண்டுமா? என்று அரசின் விவர குறிப்பில் தெரிவிக்கப்படவில்லை. எனவே, அந்த அளவை குறைப்பதற்கு என்ன செய்வது? அங்கு வேலையும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆலையை மூடுக!
தொடர்ந்து பேசிய சின்னதுரை,“ ஏற்கெனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது. மிகப்பெரிய போராட்டத் திற்கு பிறகு, அந்த ஆலை மூடப் பட்டது. மீண்டும் அதை திறப்பார் களா? என்ற விவாதம் வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையும் நிராகரிக் கப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே, சென்னையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ஆலையை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய செல்வப்பெருந்தகை,“ இந்த ஆலை தொடர்பாக மக்களிடம் உள்ள அச்சத்தை போக்குவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு களை திரும்பப் பெற வேண்டும். கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள குழாய்களை மாற்ற வேண்டும் என்றார். ஆலை இருக்கும் பகுதி கடல் சார்ந்த பகுதி. கடலில்தான் வாயு கலந்திருக்கிறது. பூமியில் கலக்க வில்லை. கடல் யாருடைய கட்டுப் பாட்டில் இருக்கிறது? துறைமுகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது? என்பதை ஒரு புறம் எண்ணிப் பார்க்க வேண்டும். இது கடல் சார் பகுதி என்றால் அந்த ஆலைக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), மாரிமுத்து (சிபிஐ), வேல்முருகன், ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோரும் கோரமண்டல் உர ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தினர்.