tamilnadu

img

பாகூரில் மார்க்ஸ் நினைவு தினம் அனுசரிப்பு

பாகூரில் மார்க்ஸ் நினைவு தினம் அனுசரிப்பு

மாமேதை காரல் மார்க்ஸின்  142 வது நினைவு தினத்தையொட்டி  சிபிஎம் பாகூர் கொம்யூன் அலுவலகமான தோழர் எஸ்.வீரபத்திரன் நினைவகத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில் சிபிஎம்   பாகூர் கமிட்டி செயலாளர் ப.சரவணன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெ.பெருமாள்,த.தமிழ்ச்செல்வன், மாநில குழு உறுப்பினர்கள் க.கலியன், அ.இளவரசி,கமிட்டி உறுப்பினர்கள் இரா.பக்தவச்சலம், வ.ஹரிதாஸ், பாகூர் வடக்கு கிளை செயலாளர் இர.ஆனந்தராமன் உட்பட கிளை செயலாளர்கள்  மார்க்சின் உருவபடத்திற்கு மலர்துவி அஞ்சலி செலுத்தினர்.

கடலூரில் மார்க்ஸ் சிலைக்கு மரியாதை …

மாமேதை கார்ல் மார்க்சின் 142 வது நினைவு தினத்தை முன்னிட்டு கடலூரில் அவரது சிலைக்கு சிபிஎம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமையில் மாவட்ட குழு அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தும், மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவித்தும் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ் கண்ணன்,  மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.ஆளவந்தார், எஸ்.கே.பக்கிரான், கண்ணன், மாநகர குழு உறுப்பினர்கள் ஸ்டாலின்,  கருணாகரன், பாபு, செந்தில், ரமேஷ், ரஜினி, மாணவர் சங்க நிர்வாகிகள் சுகிணாபாரதி,  சிவநந்தினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக பட்ஜெட்: சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஏமாற்றம்  ஓய்வூதியர் சங்க பொதுச்செயலாளர் பி.ராமமூர்த்தி விமர்சனம்


தமிழக அரசு பட்ஜெட்டில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமற்றம் அளிப்ப தாக தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. இது ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிக்கிறது. 
தமிழக முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மிகவும் குறைந்த ஓய்வூதியம் பெற்று வறுமையில் வாடும் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 ரூபாயும், அகவிலைப்படி கோரிக்கையையும் நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.