tamilnadu

img

சாமானிய மக்கள் அரசியலின் ஒளிவீசும் தியாகச்சுடர் லீலாவதி

ஏப்.23 வழக்கம் போல் தீக்கதிர் அலுவலகத்து க்கு புறப்பட்டுச் சென்றபோதுதான் மதுரை மாநகராட்சி 59ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் கு.லீலாவதி வெட்டிப் படுகொலை செய்யப் பட்டார் என்ற பேரதிர்ச்சி செய்தி கிடைத்தது. உடனடி யாக வில்லாபுரத்துக்கு சென்றபோது அந்த பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தோழர் லீலாவதியின் உடலை மதுரை அரசு மருத்துவமனை க்கு கொண்டு சென்றுவிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினருடன் அப்பகுதி மக்களும் வில்லா புரம் நுழைவுப்பகுதியில் அவனியாபுரம் சாலையில் அமர்ந்து மறியல் செய்து கொண்டிருந்தனர். மதுரை மாநகரம் முழுவதும் காட்டுத் தீ போல் இந்த செய்தி பரவியது. தகவல் பரவிய பகுதிகளில் எல்லாம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோபாவேசத்து டன் கொந்தளித்துப் போய் வீதிகளில் திரண்டனர். “கொலையாளிகளைக் கைது செய்” என்பதே எங்கும் முழக்கமாக இருந்தது. அரசு ராஜாஜி மருத்துவ மனை முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் வெள்ளமென திரண்டிருந்தனர். மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பி.மோகன் தலைமையில் தோழர்கள் அழுகையும், ஆத்திரமுமாக அங்கே கூடி இருந்தனர். அங்கு காவல் துறையினர் குவிக்கப் பட்டிருந்தனர். அப்போதைய மாநகர காவல் ஆணை யர் சேகர் நேரில் அங்கு வந்து தோழர் மோகனிடம் குற்றவாளிகளைக் கட்டாயம் கைது செய்வோம் என்று உறுதியளித்துச் சென்றார்.

“வில்லாபுரத்து வீராங்கனை” என்று மக்களால் அழைக்கப்படும் தியாகி தோழர் கு.லீலாவதி தமிழகத் தில், ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கான அரசி யல் களப்போராளியாக அடையாளம் காணப்படுகி றார். ஆனால் அவரது வாழ்வும், அரசியல் பணியும் சாமானியமானதல்ல. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த கைத்தறி நெசவாளி அவர். அவரது கணவர் குப்புசாமி, வீதிவீதியாக சைக்கிளில் சென்று பாத்திர வியாபாரம் செய்பவர். அவர்களுக்கு மூன்று மகள்கள்.  கட்சி உறுப்பினரான குப்புசாமி, தனது துணைவி லீலாவதியை இயக்கப் பணிகளில் பங் கேற்கச் செய்தார். தொடக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் சேர்ந்து களப்பணியாற்றிய லீலாவதி படிப்படியாக அப்பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளில் இயக்கம் நடத்தக் கூடிய ஊழியராக பரிணமித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திலும் ஊக்கமுடன் செயல்பட்டார். இந்தச் சூழ்நிலையில்தான் 1996ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில் மதுரை மாநகராட்சி 59ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக கு.லீலாவதி நிறுத்தப்பட்டார். பணபலம், அதிகார பலம், சாதிய செல்வாக்குடன், ரௌடிகளின் அச் சுறுத்தலும் அங்கே கொடி கட்டிப் பறந்தது. அப்போ தைய ஆளும் கட்சியுடன் நெருக்கமான பிணைப் பில் இருந்தனர் சமூக விரோதிகள். வில்லாபுரம் பகு தியில் மக்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு இருந்தது. அப்போது லாரி தண்ணீரை மக்களுக்கு காசுக்கு விற்பனை செய்து ஆதாயம் பார்த்தது ஒரு சமூக விரோ தக் கும்பல். ரேசன் கடையிலும் பொருட்களை விநியோ கிப்பதில் முறைகேடு, அங்கேயும் அதே கும்பலின் ராஜ்ஜியம். சாமானிய மக்கள் எதுவும் கேட்க முடி யாது. இது தவிர கடைகளில் மாமூல் வசூல் ஒருபுறம் என அந்த பகுதி முழுவதுமே சமூக விரோத கும்ப லின் கட்டுப்பாட்டில் சிக்கி இருந்தது. 

இந்தச் சூழ்நிலையில்தான் செங்கொடியின் புதல்வி லீலாவதி உள்ளாட்சித் தேர்தலில் வேறு எந்த பின்புலமும் இல்லாமல் கையில் உயர்த்திப் பிடித்த செங்கொடியோடும், உடனிருந்த தோழர்க ளோடும் வீடு, வீடாக மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். பண பலம், ரௌடிகள் அட்டகாசம், ஆளும் கட்சியின் அதிகாரம் ஆகியவற்றின் பலத்தை நம்பி நின்ற ஆளும் கட்சி வேட்பாளர் எளிதாக வெற்றி பெற்று விடுவோம் என்று நம்பினார். வாக்கு எண்ணப்பட்டபோது அவருக்கு அதிர்ச்சி காத்தி ருந்தது. ஆம் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட போது, ஆளும் கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பா ளரை விட, கு.லீலாவதி முன்னணியில் இருந்தார். ஆனால் அப்போதே அவரது வெற்றியை அறிவிக்க விடாமல் தடுப்பதற்கு, ஆளும் கட்சியினர் தேர்தல் அலுவலரை சூழ்ந்து கொண்டு தகராறு செய்தனர். ஆனால்  தோழர் இரா.ஜோதிராம் உள்ளிட்ட கட்சியி னர் அங்கே சென்று, சட்டமுறைப்படி, வாக்கு எண்ணிக்கையில் எந்த பிரச்சனையும் இல்லாத தால், லீலாவதியின் வெற்றியை அறிவித்து சான்றி தழ் வழங்க வேண்டும் என்று உறுதியுடன் நின்றனர். நேர்மையான அந்த அதிகாரியும் லீலாவதியின் வெற்றியை அறிவித்து சான்றிதழ் கொடுத்தார்.

ஆக லீலாவதி ஜனநாயகமுறைப்படி மக்கள் பிரதிநிதியாக நியாயமான முறையில் தேர்ந்தெடுக் கப்பட்டதில் கூட மார்க்சிஸ்ட் கட்சி ஒரு போராட்டத்தை நடத்த வேண்டிய அவசிய நிலை இருந்தது. சற்றேறக்குறைய ஆறு மாத காலம் மட்டுமே லீலாவதி மாமன்ற உறுப்பினராக பணியாற்றினார். அதற்குள்ளாக 59ஆவது வார்டு மக்களின் ஏகோ பித்த ஆதரவைப் பெற்ற தலைவராக உயர்ந்தார். மக்களின் ஜீவாதாரமான குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வீதிகளில் குடிநீர்க் குழாய் அமைக்க ஏற்பாடு செய்தார். இதன் மூலம் மக்களிடம் குடிநீரில் காசு வசூலித்த சமூக விரோதக் கும்பலின் வருவாய்க்கு தடை ஏற்பட்டது. அதேபோல் ரேசன் கடைகளில் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யவும் நேரடியாக களத்தில் நின்றார். எனவே அங்கும் சமூக விரோதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இத்துடன் தெற்குவெளி வீதி, வில்லாபுரம், அவனியாபுரம் சாலையில் சின்னஞ் சிறு கடைகள் முதல் வியாபாரம் செய்யும் வணிகர்க ளிடம் மாமூல் வசூலிப்பதை தங்கள் உரிமையாகக் கருதி ரௌடித்தனத்தில் ஈடுபட்டுவந்தனர் சமூக விரோதிகள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியா பாரிகளைத் திரட்டி தெற்குவெளி வீதி வில்லாபுரம் சாலை சந்திப்பில் மறியல் போராட்டத்தை நடத்தி, சமூக விரோதிகளின் மாமூல் வசூலுக்கு காவல் துறை மூலம் முற்றுப்புள்ளி வைக்கச் செய்தார் மாமன்ற உறுப்பினர் லீலாவதி.

கம்யூனிஸ்ட்டுகள் மக்கள் கடலில் நீந்தும் மீன்களைப் போன்றவர்கள் என்ற சொல்லுக்கு உயிர்ப்பான எடுத்துக்காட்டாக வாழ்ந்தார் லீலாவதி. கிடைத்த அதிகாரம் கொஞ்சம்தான் என்றாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான வழிகாட்டுதலில் மக்கள் சக்தியை திரட்டி பிற்போக்கு, சமூக விரோத அதிகாரக் கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதை செய்து காட்டினார் லீலாவதி. மக்களுக்கான அரசியலில் மக்களே எஜமானர்கள். அவர்களுடன் இருக்கும் உயிர்த்துடிப்பான உறவின் மூலம் எத்தகைய அதிகாரத்தையும் தகர்க்க முடியும். இன்றைக்கு ஜன நாயக அரசியலுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் இன்றைய சூழலில் தியாகி லீலாவதியின் வாழ்வு என்றென்றும் சுடர் வீசும் ஒளிவிளக்காகும்.

- வே.தூயவன்