அமெரிக்காவில் அமேசான் ஊழியர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொழிற்சங்கம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களே கைது செய்யப்பட்டிருக்கி றார்கள். தொழிற்சங்கம் உருவாக்குவது பற்றி பிப்ரவரி 25 அன்று வாக்கெடுப்புகள் பல இடங்களில் நடை பெற்றுள்ளன. இதற்கான முடிவுகள் 28 ஆம் தேதி அறிவிக்கப்படும். வாக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுத்தவே முன்னணி ஊழியர்கள் கைது செய்யப்படுவதாக தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆயிரக்கணக்கான கோடி டாலர்கள் மதிப்புள்ள கடனை எப்படித் திரும்பச் செலுத்துவது என்பது பற்றி ஈரானுடன் இராக் பேச்சுவார்த்தை நடத்தி யுள்ளது. இதற்காக வங்கி மூத்த அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று இராக்கிலிருந்து ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்றுள்ளது. ஆஸ்திரியத் தலைநகர் வியன் னாவில் ஈரானின் அணுசக்தி குறித்து நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்ற பிறகு, கடன் குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதற்றத்தை மேலும் வளர விடாமல் ரஷ்யாவும், உக்ரைனும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. அதற்கான வாய்ப்புகளுக் கான கதவுகள் மூடப்படவில்லை. கதவுகளை மூடி விட வும் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ள ஐ.நா.சபைக் கான சீனாவின் சிறப்புத் தூதர், அமைதிக்கான தீர்வை நோக்கி நகர வேண்டும் என்று கூறியுள்ளார். சம்பந்தப் பட்ட அனைத்துத் தரப்பினரும் பொறுமை காக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருக் கிறார்.