மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் "வாக்கிங் வித் தி காம்ரேட்" நூலைபாடத்திலிருந்து நீக்கியதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் முதுநிலை ஆங்கிலம் மூன்றாம் பருவத்தில் எழுத்தாளர் அருந்ததிராயின் வாக்கிங் வித் தி காம்ரேட் (Walking with the comrade) எனும் நூலை பாடத்திலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக அந்த பாடப்பகுதியை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் A.T.கண்ணன் தலைமையில் மாணவர் சங்கத்தினர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மாநில செயலாளர் வீ.மாரியப்பன், மாநில துணை செயலாளர்கள் ஆறு.பிரகாஷ், கோ.அரவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.