tamilnadu

img

மன்னார்குடி நகராட்சி - அரசுக் கல்லூரி சாலை நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்குமா? பாதாளக் குழியாக மாறி விபத்தை ஏற்படுத்தும்

மன்னார்குடி
படத்தில் நாம் காணும் இந்த பள்ளம்மன்னார்குடி நகராட்சியில் இருந்து அரசு கலைக்கல்லூரி செல்லும் சாலையில் உள்ளது. இந்த பள்ளத்தின் ஆழம் ஒன்றரைஅடி. மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது, இந்த பள்ளம்  மறைந்திருக்கும். இச்சாலையில் புதிதாக இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் இந்தடொங்கு பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்வார்கள். சிலர் காயம்பட்டதும் உண்டு. இந்த சாலை மன்னார்குடி திருமக்கோட்டை பிரதான சாலை.இந்த சாலையில் இந்தியன் ஆயில்சமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை உள்ளது. அரசு கலைக்கல்லூரி, தனியார் பொறியியல் கல்லூரிகள், வரலாற்று சிறப்புமிக்க பின்லே மேல்நிலைப்பள்ளி, பின்லே மைதானம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்,  உழவர் சந்தை உள்ளன. இச்சாலையின் வழியேதான் கிராமப் பகுதி மாணவர்கள் சைக்கிளில் உயர்நிலைப் பள்ளி-மேல்நிலைப் பள்ளிகளுக்கு   வந்து திரும்புவர். காலையில் உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள்-பொதுமக்கள் என போக்குவரத்து இந்த சாலையில் நிரம்பி வழியும். மன்னார்குடி நகராட்சியில் இருந்து பின்லே பள்ளி மைதானம் வரையிலும் இந்த லட்சணத்தில்தான் சாலை உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம் கூறுகையில், நகராட்சி அலுவலகம் தொடங்கி வ.உ.சி சாலை, உழவர் சந்தை வரை சாலையில் இருக்கும்பள்ளம்- படுகுழிகளை நகராட்சி நிர்வாகம் உடனே செப்பனிட வேண்டும். குறிப்பாக இந்த சாலையில்  உள்ள உழவர் சந்தை எதிரில் இருக்கும் மரணபடுகுழியை உடனடியாக மூடி, வாகனஓட்டிகளை விபத்திலிருந்து காத்திட வேண்டும். தண்ணீர் தேங்கி நின்று பயணிகளுக்கு பயனற்று மாறிப்போன சிவானந்தா பேருந்து நிறுத்தத்தை சீர்செய்ய வேண்டும்.

மன்னார்குடி நகராட்சி அலுவலகத்திலிருந்து வ.உ.சி. ரோடு பின்லேபள்ளி மைதானம் வரை செல்லும் சாலையில் பொதுமக்கள், மாணவர் கள், வாகன ஓட்டிகளின் பயன்பாடு அதிகமாக இருப்பதால்  சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்திட  வேண்டும். இதேபோல ஓரிரு நாட்கள் மழை பெய்தால், மன்னார்குடி நகரத்தின் முக்கிய தெருச்சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்று, குளம் போல் காட்சியளிக்கிறது. உடனடியாக வடிகால் களை புனரமைத்து  தண்ணீர் வடிவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் வஉசி சாலையை உடனேநகர நிர்வாகம் செப்பனிட வேண்டும்.குறிப்பிட்ட கால வரையறைக்குள்  இப்பிரச்சனை சரி செய்யப்படவில்லை என்றால், கட்சியின் நகர குழு சார்பில்,வஉசி  சாலையில்  உழவர் சந்தை எதிர்புறம் நாற்று நடும் போராட்டம் நடத்துவதென  முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.வஉசி சாலையின் அவல நிலையை சரி செய்திட மன்னார்குடி நகராட்சிஉடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்என அப்பகுதி மக்கள் எதிர்பார்க் கின்றனர்.