ஹைதராபாத் சமஸ்தா னத்தில் மன்னராய் இருந்த நிஜாம் என்ற பெயர் கொண்ட மன்னனின் ஆட்சியில் ஆயி ரக்கணக்கான ஏக்கர் நிலத் தைக் கொண்டிருந்த நிலப்பிர புக்கள் அங்கிருந்த ஏழை, எளிய மக்களை, விவசாயத் தொழிலாளிகளை, கைவினை ஞர்களை கொத்தடிமை போல் வைத்து கொழுத்து வந்தனர். இதுபோக, ரஜாக்கர்கள் என்ற பெயர் கொண்ட ஒரு குண்டர் படையும் மக்களை வாட்டி வந்தது. இதை எதிர்த்து 1946 ஆம் ஆண்டு முதல் வீரஞ்செறிந்த தெலுங்கானா மக்களின் ஆயுத எழுச்சி துவங்கியது. இதற்கு தலைமை வகித்து வழி நடத்தியவர் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் பி.சுந்தரய்யா.
அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் ஐந்து ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, இந்த எழுச்சிக்கு உத்வேகமூட்டினார். 1951 ஆம் ஆண்டில் முடிவுற்ற இந்தப் போராட்டத்தின் விளைவாக பத்து லட்சம் ஏக்கர் நிலம் நிலப்பிரபுக்களிடம் இருந்து கைப்பற்றப் பட்டு நிலமற்ற ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டது. நில வெளியேற்றம் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவ சாயத் தொழிலாளர்களின் தினக்கூலி உயர்த்தப்பட்டது. ஆதிவாசிகள், பழங்குடியினர் ஆகியோர் தங்கள் உழைப்பின் பயனை அடைந்தனர். முதன்முறையாக இரண்டு வேளை உணவு வயிறார உண்டனர். 1930களில் சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போதே சுதந்திரப் போராட்ட இயக்கத்திலும், பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் இணைந்து தனது அரசியல் பயணத்தை துவக்கிய தோழர் சுந்தரய்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான போது முதல் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு, 1977 வரை கட்சி யை வழிநடத்திய மகத்தான போராளி; அரசியல் பயணம் துவங்கிய அதே சென்னையில் 1985 மே 19 அன்று காலமானார்.
இன்று (19.5.2022) தோழர் பி.சுந்தரய்யா நினைவுநாள்