tamilnadu

img

சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை அடிப்படை உரிமையாக்குக!

சென்னை, ஆக.1 - சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை ஒன்றிய அரசும், மாநில அரசும் அடிப்படை உரி மையாக்க வேண்டும் என்று சென்னை யில் நடைபெற்ற சிறப்பு மாநாடு வலியுறுத்தி யுள்ளது.  தொழிற்சங்கங்கள், வாலிபர், மாதர், மாணவர் அமைப்புகள், சமூக இயக்கங்கள் என 25 அமைப்புகள் இணைந்து ‘சமூக பாது காப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம் - மெஸ்’ எனும் அமைப்பை உருவாக்கி உள் ளன. இந்த அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி செவ்வாயன்று எம்ஜிஆர் நகரில் இந்த  மாநில சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து  கொண்டனர். இந்த மாநாட்டில், ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டிற்கு அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பெ.சண்முகம் தலைமை தாங்கினார். மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலை வர் க.பீம்ராவ் வரவேற்றார். கேரள மாநில நிதி யமைச்சர் கே.என்.பாலகோபால், சிஐடியு மாநி லத் தலைவர் அ.சவுந்தரராசன், மெஸ் இயக்கத் தின் துணை அமைப்பாளர் ஜி.சுகுமாறன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் உள்ளிட் டோர் பேசினர். வரவேற்புக்குழுச் செயலாளர் ஜி.செந்தில்குமார் நன்றி கூறினார். ‘சப்தம்’ குழுவினரின் கலை மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

- தீர்மானங்கள் 4