tamilnadu

img

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல்: 12 இடங்களைக் கோருகிறது சிபிஎம்

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் 12 இடங்களை மகாவிகாஸ் அகாதி கூட்டணியில் கோரியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.  மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டாக்டர் அசோக் தாவ்லே தலைமையிலான குழு மும்பையில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத்பவார், மாநிலத்  தலைவர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோரு டன் ஆலோசனை நடத்தியது. இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. மக்களவைத் தேர்தலில் ஒற்று மைக்காக மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை பவார் பாராட்டினார். மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எதிராக அமோக வெற்றி பெற்ற இந்தியா கூட்டணியின் மகா ராஷ்டிர வடிவமான மகாவிகாஸ் அகா திக்கு சிபிஎம் வாழ்த்து தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் சிவசேனா உத்தவ் பிரிவினரையும் காங்கிரஸ் தலைவர் களையும் சந்திக்க உள்ளதாக அசோக் தாவ்லே தெரிவித்தார். இந்த சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர் வினோத் நிகோல், டாக்டர். உதய் நர்கர், டாக்டர் அஜித் நவ்லே, முன்னாள் சட்டமன்ற உறுப்பின ர்கள் நரசையா ஆதம், ஜே.பி.கேவிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்த லில் சரத் பவார் மற்றும் மகாவிகாஸ் அகாதி தலைவர்களின் கோரிக்கையை அடுத்து, திந்தோரி தொகுதியில் இருந்து ஜே.பி.கேவிட்டின் வேட்புமனுவை சிபிஎம் திரும்பப் பெற்றது. 2019-இல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தொகுதி இது. இந்த முறை என்சிபி (பவார் பிரிவு) வேட்பாளர் பாஸ்கர் முரளிதர் பகாரே 1,13,199 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை தோற்கடிக்க இது உதவியது. இந்தப் பின்னணியில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கீடு  செய்வது என ஏற்கெனவே உறுதி யளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மேற்கண்ட சந்திப்பின்போது, மார்க்சிஸ்ட் கட்சிக்கு 12 இடங்கள் ஒதுக்குமாறு தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.