tamilnadu

img

மதுரை: ரயில் நிலையத்தில் ரூ7.62 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் 

மதுரை ரயில் நிலையம் அருகே ரூ.7.62 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
மதுரை ரயில் நிலையத்திற்கு குடிநீர் கொண்டு வந்த லாரியில் ஒரு பை கிடந்துள்ளது. அதில் ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்ட ஓட்டுநர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பையில் இருந்த ரூ.7.62 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்  செய்தனர். இச்சம்பவம் குறித்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.