சென்னை/மதுரை, ஜன.21 - மதுரை மேலும் ஒரு புதிய சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின் வெள்ளியன்று அறிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளி யன்று மதுரை மாவட்டத்திற்கு ரூ.320 கோடியே 58 இலட்சம் மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி யும், நிறைவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். 51 கோடியே 77 லட்சம் மதிப்பில் மருத்துவக் கல்லூரி, புதிய கல்வி யியல் கூடம், ஊரக வளர்ச்சித்துறை புதிய அலுவலகம் உள்ளிட்ட 10 முடி வுற்ற திட்டங்களை துவக்கிவைத்தார். ரூ.49 கோடி 74 லட்சம் மதிப்பில் பொது நல ஆய்வகம், தோப்பூரில் தொற்று நோய் சிறப்பு மருத்துவ மனை உள்ளிட்ட 11 திட்டப் பணி களுக்கும் அடிக்கல் நாட்டினார், கூட்டு றவுத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட 19 துறைகளின் கீழ் 67,831 பய னாளிகளுக்கு 219 கோடி ரூபாய் அள வில் நலத்திட்ட உதவிகளையும் துவக்கி வைத்தார்.
மதுரை மாவட்ட வளர்ச்சிக்கான 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர் சில நாட் களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டா லினை நேரில் சந்தித்து வழங்கினர். இந்த நிலையில், மதுரை மாவட்டத் திற்கான அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: மதுரை நகரம் மாமதுரையாக அதா வது மேலும் அழகான மதுரையாக அனைத்துத் துறைகளிலும் தன்னி றைவு பெற்றதாக மாற்றப்படும். திமுக ஆட்சிக்காலத்தில் மதுரை யில் எண்ணற்ற வளர்ச்சி திட்டப் பணி கள் நடைபெற்றது. அவை மேலும் அதி கப்படுத்தப்பட்டு மாமதுரையாக மாற்றப் படும். மதுரையில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூலகம் அமைய உள்ளது.
அலங்காநல்லூரில் புதிதாக மாபெரும் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும். மதுரையில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.500 கோடி செலவில் மதுரை யில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். மதுரை மத்திய சிறை, புதிய இடத்துக்கு மாற்றம் செய்யப் படும். மதுரை சுப்பிரமணியபுரம் மேம்பாலத்திற்கு, முத்து என பெயர் சூட்டியவர் கருணாநிதி. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் புதிதாக மேம்பா லங்கள் அமைக்கப்படும். ரூ.500 கோடி செலவில் மதுரையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோயி லில் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். மதுரை நகருக்குள் போக்கு வரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக செயல் பட்டு வருகின்றனர். சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் பேசுகையில் “மதுரைக்கான கோ ரிக்கைகள் அனைத்தையும் ஆர்வத்துடன், தெளிவாக முதல்வர் கேட்டறிந்தார். கைவிடப்பட்ட பகுதியாக தென் மாவட்டம் இருந்த நிலை இனி மாறும். மதுரையின் வளர்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக் கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மதுரையின் புதிய அத்தியாயத்தின் துவக்க மாக முதல்வரின் செயல்பாடுகள் இருக்கும்” என்று பேசினார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அதி காரிகள் கலந்துகொண்டனர். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், மாவட்ட ஆட்சியர் மரு. எஸ். அனிஸ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் மரு. கா. ப. கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர் கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், ஏ. வெங்க டேசன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.