tamilnadu

மார்ச் 29 முதல் மீண்டும் மதுரை-சிங்கப்பூர் விமான சேவை

மார்ச் 29 ஆம் தேதி முதல் மதுரை-சிங்கப்பூர் விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனா  தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் சர்வதேச  விமான சேவைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.