மதுரை,ஏப்.28- மதுரையை சேர்ந்த டேக்வாண்டோ வீரர் 29 எரியும் கான்கிரீட் கற்களை கை களால் உடைத்து, பாகிஸ்தான் வீரரின் சாதனையை முறியடித்து,புதிய சாதனை படைத்துள்ளார். மதுரையை சேர்ந்தவர் டேக் வாண்டோ பயிற்சியாளர் நாராய ணன். இவர் 30 வினாடிகளில் 29 எரியும் கான்கிரீட் கற்களை கைகளால் உடைத்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். இதற்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த முகமது இம்ரான் 30 வினாடிகளில் 25 கான்கிரீட் கற்களை உடைத்ததே உலக சாதனையாக இருந்தது. இவரின் உலக சாதனையை அங்கீ கரித்த கின்னஸ் உலக சாதனை நிறு வனம் பயிற்சியாளர் நாராயணனை பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌர வித்தது. டேக்வாண்டோ பயிற்சியாளர் நாராயணனின் 33 ஆவது கின்னஸ் சாதனை இதுவாகும். புதிய சாதனை வீரர் நாராயணனுக்கு பல்வேறு தரப்பி னர் பாராட்டுக்களையும் வாழ்த்துக் களையும் தெரிவித்து வருகின்றனர்.