இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாநகர் அரசரடி பகுதிக்குழு சார்பில் பெத்தானியபுரம் சின்னச்சாமி பிள்ளை தெருவில் பொங்கல் விழா வியாழனன்று நடைபெற்றது. இந்த விழாவில், ஒன்றிய மோடி அரசு, மதுரை மேலூர் பகுதியில் வேதாந்தாவின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் அமைக்க உள்ள டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து “#Save Arittapatti” என்ற பதாகையை வைத்திருந்தனர். அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், தங்களுடைய கை அச்சுக்களை, பதாகையில் வைத்து டங்ஸ்டன் எதிர்ப்பை தெரிவித்தனர்.