tamilnadu

img

திட்டப்பணிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மதுரை, டிச.28- மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் நடை பெற்று வரும் அரசு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு. எஸ். அனிஸ் சேகர் செவ்வாயன்று பார்வையிட்டு,ஆய்வு மேற்கொண்டார். தாமரைப்பட்டி கிரா மத்தில் கட்டப்பட்டு வரும் புதிய சமுதாயக் கூடம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தும்பை பட்டி ஊராட்சியில் சாலையோரங்களில் மரங்கள் நடும் பணி, மேலவளவு ஊராட்சி யில் குளம் அமைக்கும் பணி, கண்மாய் கரைப்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த கால்வாய் பகுதிகள் ஆய்வு செய்தார் . பின் னர் கச்சிராயன்பட்டி ஊராட்சியில் அனை வருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப் பட்டு வரும் கட்டுமானப் பணிகள், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடு களுக்கும் குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் ஆகியவைகளை அதிகாரிகளுடன் பார்வை யிட்டார்.