tamilnadu

மதுரை முக்கிய செய்திகள்

பிப்.26-ல் போக்குவரத்து தொழிலாளர்  சங்க காரைக்குடி மண்டல பேரவை 

இராமநாதபுரம், பிப்.24- தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு) காரைக்குடி மண்டல 33-ஆவது ஆண்டு பேரவை இராமநாதபுரம் அண்ணா நகர் அரசு ஊழியர் சங்கம் தோழர் பகவதி நினைவு அரங்கில் பிப்ரவரி 26 (சனிக் கிழமை) நடைபெறுகிறது.  பேரவைக் கூட்டத்திற்கு மத்திய சங்க தலைவர் எஸ்.ஆர்.ராஜன் தலைமை வகிக்கிறார். சங்கத்தின் பொதுச் செய லாளர் எஸ்.தெய் வீரபாண்டியன் வேலை அறிக்கை சமர்ப்பிக்கிறார். சிஐடியு இராம நாதபுரம் மாவட்ட செயலாளர் எம். சிவாஜி, சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் ஆகியோர் உரை யாற்றுகின்றனர்.

தேனியில் ஆட்சி மொழிக் கருத்தரங்கம்

தேனி, பிப்.24- தேனி ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் வியாழ னன்று மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீ தரன் தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) க.அன்ப ழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உத வியாளர் (கணக்கு) ம.முகம்மது அலி ஜின்னா, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பெ.இளங்கோ, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்த ரம், வையைத் தமிழ்ச்சங்க நிறுவனர் ச.ந.இளங்குமரன், எழுத்தாளர் தேனி சீருடையான், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில், தமிழில் சிறந்த குறிப்பு கள் வரைவுகள் எழுதும் அரசுப் பணி யாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 

செல்போன் வாங்கி தராததால் சிறுமி தற்கொலை

தேனி, பிப்.24- தேனி அருகே ஊஞ்சாம்பட்டியைச் சேர்ந்தவர் அருண்குமார்(33). இவர் வட புதுப்பட்டியில் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறார். இங்கு மேற்கு வங் கத்தைச் சேர்ந்த சுதிப்தாஸ் என்பவர் குடும்பத்துடன் வேலை பார்த்து வரு கிறார்.  இவரது மகள் சஷ்தமிதாஸ் (17) மொபைல் வாங்கித் தரக் கோரி சண்டை போட்டுவந்துள்ளார். இதற்கு சுகிப்தாஸ் மறுத்துள்ளார். இதனால் வியாழனன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அல்லிநகரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்கண்ணா விசாரிக்கிறார்.

வாக்குச் சாவடியில் களவு  போன கண்காணிப்பு கேமரா

தேனி, பிப்.24- போடியில் வாக்குச் சாவடியில்  பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா திருடு போனது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போடியில் 70 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டி ருந்தன. 70 வாக்குச் சாவடிகளிலும் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. தேர்தல் முடிந்து கண்காணிப்பு கேமராக்கள் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் போடி அசேன் உசேன் தெருவில் உள்ள சேது மறவர் திருமண மண்டபத்தில் வாக்குச் சாவடி எண் 5-ல் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் மெமரி கார்டு ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து போடி நகராட்சி ஆணையாளரும், தேர்தல் அலுவல ருமான தி.சகிலா கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா, மெமரி கார்டு ஆகியவற்றை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.

கஞ்சா விற்றவர் கைது

தேனி, பிப்.24- சின்னமனூரில் கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்த போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவினர் அவரி டமிருந்து 2.400 கிலோ கஞ்சாவை பறி முதல் செய்தனர். தேனி போதைப் பொருள் நுண்ண றிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் சத்யா தலைமையில் தலைமைக் காவலர் ராஜா உள்ளிட்ட காவல்துறையினர் சின்ன மனூர் காந்திசிலை அருகே ரோந்து சென்று கொண்டிருந்தனர் அப்போது தேனி அருகே அன்னஞ்சி இந்திரா காலனியைச் சேர்ந்த ஜெய ராஜை (36) சந்தேகத்தின் பேரில் விசா ரித்தனர். அவர் 2 கிலோ 400 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந் தது தெரிய வந்தது. காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

காட்டுப் பன்றிகள் குறுக்கே சென்றதால் வாகனத்தில் சென்றவர் பலி

அருப்புக்கோட்டை, பிப்.24- அருப்புக்கோட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் திடீரென காட்டுப் பன்றிகள் குறுக்கே வந்த தால் கீழே விழுந்ததில் உயிரிழந் தார். அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியைச் சேர்ந் தவர் சதீஸ்குமார் (37). இவர் விருது நகர் சென்று விட்டு அருப்புக்கோட் டைக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.  துர்க்கை அம்மன் கோவில் அருகே வந்த போது, திடீரென காட்டுப் பன்றிகள் சாலையின் குறுக்கே சென்றன. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த சதீஸ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். இதுகுறித்து, சதீஸ்குமார் மனைவி கனகா கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

முல்லைப்பெரியாறு அணையில் இன்று  துணைக் கண்காணிப்புக்குழு ஆய்வு

தேனி, பிப்.24- மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக் குமார் தலைமையிலான துணைக் கண்காணிப்பு குழுவினர் வெள்ளி யன்று பெரியாறு அணையில் ஆய்வு செய்கின்றனர்.  பெரியாறு அணையை கண்கா ணித்து பராமரிக்க உச்சநீதி மன்றம் மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன் ராஜ் தலை மையிலான மூவர் கண்காணிப்பு குழுவை அமைத்தனர். இக்குழு விற்கு உதவியாக துணை கண்கா ணிப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக தற்போது கொச்சியி லுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக் குமார் உள்ளார்.  தமிழக பிரதிநிதிகளாக பெரி யாறு சிறப்பு கோட்ட செயற்பொறி யாளர் சாம் இர்வின், உதவி செயற் பொறியாளர் குமார், கேரள பிரதி நிதிகளாக கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகி யோர் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 17 அன்று அணையின் நீர்மட்டம் 138 அடியாக இருந்தபோது துணைக் குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.  இந்நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் 129.50 அடி யாக குறைந்துள்ள நிலையில், துணைக்கண்காணிப்பு குழுவினர் பெரியாறு அணையில் இன்று ஆய்வு செய்கின்றனர். இதைத் தொடர்ந்து, துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தின் முடிவுகளை கண்காணிப்பு குழுவினருக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.

நிலமற்ற ஏழை ஆதிதிராவிடர்களுக்கு  இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வழக்கு மதுரை ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, பிப். 24-  மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடியில் நிலமற்ற ஏழை ஆதிதிராவிடர்களுக்கு இல வச வீட்டு மனை பட்டா வழங்கு வது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடி கிராமத்தைச் சேர்ந்த விசுவநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் தாக்கல் செய்த வழக்கில், மதுரை மாவட்டம் மேலூர் பகுதி கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடி கிராமத்தில் உள்ள நிலமற்ற ஆதிதிரா விடர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க துறை சார் பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அப்பகுதி யில் 200 இலவச வீட்டுமனை பட் டாக்கள் வழங்க முடிவு செய் யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது குறித்து, எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதுகுறித்து ஆதிதிராவிட நலத்துறை எந்த வித அறிவிப்பும் வெளியிட வில்லை. இந்த நிலையில் விதிகளை மீறி வசதி படைத்த ஆதி திரா விடர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை ஒதுக்க பணிகள் நடந்து வருகிறது.  எனவே, கருங்காலக்குடியில் நிலமற்ற ஏழை ஆதிதிராவிடர் களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து நாளி தழில் விளம்பரம் வெளியிட வேண்டும்.  மேலும் ஆதிதிராவிட நலத் துறை சார்பில் ஒரு குழு அமைத்து, தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து அதன் பின்பு ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டு மனை பட்ட வழங்க உரிய உத் தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.  இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபத்யாய், கிருஷ்ணன் ராம சாமி அமர்வு முன்பு வியாழ னன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் , மனு தாரர் கூறுவது போல் யாருக்கும் தற்போது வரை இலவச வீட்டு மனை பட்டா வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.  இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நிலமற்ற ஏழை ஆதி திராவிட பயணாளிகளுக்கு, இல வச வீட்டு மனை பட்டா எந்த விதிமுறைகளின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து, மதுரை மாவட்ட ஆட்சி யர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கு விசார ணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

சிறுத்தை மீட்பு 

சின்னாளப்பட்டி, பிப்.24- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரியகோம்பை பகுதியில் சிறுத்தை ஒன்று நடக்க முடியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கன்னிவாடி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.  இந்நிலையில் மாவட்ட வனப்பாது காவலர் ராமசுப்பு, மாவட்ட வன அதிகாரி பிரபு தலைமையில் வனக் காவலர்கள் கொண்ட குழு புதனன்று கன்னிவாடி வனச்சரகத்தில் பல்வேறு பகுதிகளில் சிறுத்தையை தேடினர். இந்நிலையில் வியாழனன்று வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனவர்கள் வலைவிரித்து சிறுத்தையை பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தை புலி 4 வயது இருக்கலாம் என்றும், தசை இறுக்கம் காரணமாக சிறுத்தை தொடர்ந்து வேகமாக நடக்க முடியாமல் இப்பகுதிக்கு வந்துள்ளதாக வும், அது ஆனைமலை புலிகள் சரணா லய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரி வித்தனர். 

கம்பத்தில் பட்டப்பகலில்  வாலிபர் அடித்து கொலை

தேனி, பிப்.24- தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிலையம் அருகே முன் விரோதத்தால் பட்டப்பகலில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் மின்சார அலுவலக தெருவில் வசித்து வந்த தங்கரமேஷ் தனது சொந்த பணிக்காக கம்பம் நகராட்சி புதிய பேருந்து நிலை யம் அருகே வந்தார். அப்போது, எதிரே டிராக்டரில் வந்த காமயகவுண்டன்பட்டி சின்னபாலத் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் மகன் அசன்குமார் என்பவ ருடன் முன் விரோதம் காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டது.  இதில், மரக்கட்டையால் தங்க ரமேஷை அசன் குமார் தலையில் தாக்கி யதில் படுகாயமடைந்து, க.விலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.ஆனால் தங்கரமேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கம்பம் வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அசன்குமாரை கைது செய்தனர்.

பைக்குகள் மோதி விபத்து: 5 பேர் காயம்

தேனி, பிப்.24- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மணியகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னையா. கூலி வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த குருசம்மாள், ஆலிஸ் ஆகிய இரண்டு பெண்களை தனது டூவீலரில் க.விலக்கு அருகே உள்ள முத்தனம்பட்டி கிராமத்திற்கு வேலைக்காக அழைத்துச் சென்றார்.  முத்தனம்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது ஆண்டி பட்டியிலிருந்து தேனி நோக்கி வேக மாக சென்ற மற்றொரு இரு சக்கர வாக னம் பொன்னையா சென்ற வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற் பட்டது.  இதில் இரண்டு வாகனங்களிலும் சென்ற பொன்னையா, குருசம்மாள், ஆலிஸ் மற்றும் அரண்மனைபுதூரை சேர்ந்த பரமேஸ்வரன், மலையாண்டி உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்த னர்.  சம்பவ இடத்திற்கு சென்ற க.விலக்கு காவல்துறையினர் காயமடைந்த வர்களை மீட்டு தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலை வாய்ப்பு அலுலவகத்தில் புதுப்பிக்க வாய்ப்பு

விருதுநகர், பிப்.24- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2014 முதல் 2019 வரை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் வரும் மார்ச் 1ம் தேதிக்குள் தங்களது பதிவை புதுப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறு கையில், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2019 வரை பல்வேறு காரணங்க ளால் தங்களது பதிவுகளை புதுப் பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணி வாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே, பதிவுதாரர்கள் வரும் மார்ச் 1க்குள் இணையதளம் வாயிலாகவோ அல்லது வேலைவாய்ப்பு அலுவல கத்திற்கு நேரில் வந்தோ தங்களது பதிவு களை புதுப்பிக்கலாம் என தெரி வித்துள்ளார்.

சரவெடி வைத்திருந்த 4 பேர் கைது

வெம்பக்கோட்டை, பிப்.24- விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை அருகே தடை செய்யப் பட்ட சரவெடிகளை வைத்திருந்த தாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வெம்பக்கோட்டை காவல் துறையினர் ரோந்து சென்றபோது விஜயகரிசல்குளத்தை சேர்ந்த குருசாமி (40) என்பவர் ஆயிரம் வாலா சரவெடிகளைக் கொண்ட 30 அட்டை பெட்டிகள் வைத்திருந் தாராம். இதையடுத்து, அவர் கைது  செய்யப்பட்டார். இதேபோல் விஜயகரிசல் குளத்தை சேர்ந்த கருப்பசாமி, கீழகோதைநாச்சியார்புரத்தை சேர்ந்த சின்னமாரியப்பன் ஆகி யோர் தலா 8 கிலோ சரவெடிகளை வைத்திருந்தனர். மேலும், கீழகோதைநாச்சியார்புரத்தை சேர்ந்த கொடியரசன் என்பவர் 240 பிஜிலி வெடி பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தாராம். அவர்களையும் வெம்பக்கோட்டை காவல்துறையினர் கைது செய்த னர்.

கம்பம் நகராட்சியில் கூலி தராத ஒப்பந்ததாரர்  ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

தேனி, பிப்.24- தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகு தியில் ஒப்பந்ததாரர் மூலம் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் கடந்த மாத சம்பளத்தை வழங்கக் கோரி வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் கம்பத்தில் பர பரப்பு ஏற்பட்டது.  கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள் ளன. இந்த வார்டு பகுதிகள், சுகாதாரப் பணிகளுக்காக 53 நிரந்தர பணியாளர்கள், 107 தனியார் ஒப்பந்த துப்புரவு பணியா ளர்கள் உள்ளனர். இந்த பணியாளர்களை 3 டிவிசன்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு டிவிசனிலும் சுகாதார ஆய்வாளர் மேற் பார்வையில் துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில், ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்பு ரவு பணியாளர்களுக்கு, ஒப்பந்ததாரர் நக ராட்சியில் இருந்து தொகையை பெற்று தனது நிறுவனத்தின் மூலம் சம்பளத் தொகை யை வழங்குவது வழக்கம்.  இந்த நிலையில் ஒப்பந்ததாரரிடம் ஒப் பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த மாதத்திற்கான (ஜனவரி மாதம்) சம்பளம் புதனன்று காலை வரை வழங்கப்பட வில்லை. மேலும் இதுகுறித்து நகராட்சி கமி ஷனர்கள் பாலமுருகன் மற்றும் சுகாதார அலுவலர் சுந்தர்ராஜன் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.  இதையடுத்து புதனன்று காலை ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் சுமார் 90 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து சுகாதார அலுவலர் சுந்தரராஜன் துப்புரவு பணியாளர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.  அப்போது சம்பளம் ஓரிரு நாட்களில் வழங்கப்படும் என்றார். ஆனால் பேச்சு வார்த்தையில் திருப்தி அளிக்கவில்லை. சம்பளம் கிடைத்தவுடன் துப்புரவு பணி களை மேற்கொள்வதாக துப்புரவு பணி யாளர்கள் கூறி விட்டுச் சென்றனர்.