ஒரு கி.மீ.-க்கு ஒரு சுங்கவரி வசூல் மையம் அமைத்து வசூலிப்பீர்களா?
மதுரை, டிச. 7- மாநில நெடுஞ்சாலைகளில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கவரி வசூல் மையம் அமைத்து வசூலிப்பீர்களா? என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி யெழுப்பியுள்ளது. மதுரையில் 27 கி.மீ., தூரத்திற்குள் மூன்று சுங்கச்சாவடிகள் அமைக்க வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி மதுரை கே.கே.நகரை சேர்ந்த இம்மானுவேல், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார், அதில், “மதுரை உத்தங்குடியிலிருந்து கப்பலூர் வரையிலான சுற்றுச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் மஸ்தான்பட்டி, சிந்தா மணி, பரம்புப்பட்டி ஆகிய மூன்று இடங்க ளில் சுங்கச்சவாடி மையங்கள் செயல்படு கின்றன. மதுரை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட் டின் கீழுள்ள மேலூர் சிட்டம்பட்டி, தூத் துக்குடி சாலையில் எலியார்பத்தி, திரு மங்கலம் சாலையில் கப்பலூர் என மூன்று சுங்கச்சாவடி மையங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. தற்போது சென்னை யிலிருந்து விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் மதுரை மாவட்டத் தில் சிட்டம்பட்டி, மஸ்தான்பட்டி, சிந்தா மணி, பரம்புப்பட்டி (விமானநிலையம் அருகில்), கப்பலூர் என ஐந்து டோல்கேட் மையங்களில் கட்டணம் செலுத்திச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தேங்குவ தால் அவசரமாகச் செல்லவேண்டிய ஆம்புலன்ஸ்போன்ற வாகனங்கள் சிரமப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதி களின்படி, நான்கு வழிச்சாலையில் 60 கிலோ மீட்டர் தூரத்தில் தான் சுங்கச்சாவடி மையம் அமைக்க வேண்டும். கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 0.65 பைசா தான் வசூலிக்க வேண்டும். ஆனால் மதுரை மாவட்டத்தில் மஸ்தான்பட்டியில் இருந்து விமான நிலையம் அருகிலுள்ள பரம்புப் பட்டி (விமானநிலையம் அருகில்) வரை 27 கிலோ மீட்டருக்குள் மூன்று சுங்கச் சாவடி மையங்களில் இந்த வாகனங்களிடம் இருந்து ரூ.60 வசூலிக்கப்படுகிறது. இது நெடுஞ் சாலை ஆணைய விதிகளுக்குப்புறம்பானது. எனவே 27 கிலோ மீட்டர் தூரத்தில் மூன்று சுங்க கட்டண மையங்கள் அமைக்க அனுமதித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மூன்று சுங்கக் கட்டண மையங்கள் செயல்பட தடை விதிக்கவேண்டுமென மனுவில் கூறியிருந்தார். இந்த மனு வியாழனன்று நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன் விசா ரணைக்கு வந்தது மனுதாரர்தரப்பில் முற்றிலும் விதிமுறைகள் மீறி 27 கி.மீ தொலை விற்கு முன்று சுங்கசாவடி அமைத்து வசூலில் ஈடுபடுகின்றனர் என்றனர். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் மாநில நெடுஞ்சாலைகளில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கவரி வசூல் மையம் அமைத்து வசூ லிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பி யதோடு தமிழக அரசு ஜனவரி 11-ஆம் தேதி விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
உள்ளாட்சியில் மறைமுகத்தேர்தல் எதிர்த்த வழக்கு ஒத்திவைப்பு
மதுரை, டிச.7- மேயர் உள்ளிட்ட பதவிக ளுக்கு மறைமுகத் தேர்தல் நடை பெறும் என தமிழக அரசு பிற ப்பித்த அவசர சட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்தது. மதுரையைச் சேர்ந்த வழக்க றிஞர் முகமது ரஸ்வி மேயர், நக ராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறை முகத் தேர்தல் நடத்துவது தொட ர்பாக தமிழக அரசு பிறப்பி த்துள்ள அவசரச் சட்டத்தை செல்லாதுஎன அறிவிக்க வேண்டும். அதனை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்” என வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு வியாழனன்று நீதிபதிகள் துரைசாமி ரவீந்தி ரன் அமர்வு முன்பாக விசார ணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் இது தொட ர்பான வழக்குஉச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வழங்கக் கூறப்பட்டுள் ளது. எனவே வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்”என கூறியி ருந்தார். இதையேற்ற நீதிபதிகள் வழக்கை டிசம்பர் 19ம்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.