பிரசவத்திற்கு அனுமதித்த பெண் மரணம் விசாரணை நடப்பதாக ஆணையர் தகவல்
மதுரை, செப்.15- மதுரை கோ.புதூர் இஎம்ஜி நகர் 2 -ஆவது தெருவைச் சேர்ந்தவர் மணி முத்து(29). இவரது மனைவி சக்தி காளி (22). நிறைமாத கர்ப்பிணியான சக்தி காளியை பிரவசத்துக்காக கோ.புதூ ரில் உள்ள மாநகராட்சி மருத்துவமனை யில் சனிக்கிழமை பிற்பகல் சேர்த்துள் ளனர். அவரை பரிசோதித்த மருத்து வர்கள் இரவு எட்டு மணிக்குள் குழந்தை பிறந்து விடும் என்று தெரி வித்துள்ளனர். இந்நிலையில் ஞாயிறு அதிகாலை இரண்டு மணிக்கு சக்தி காளி இறந்து விட்டதாக இருந்த செவி லியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனது மனை விக்கு தவறான சிகிச்சை அளித்ததால் உயிரிழந்து விட்டதாக மணிமுத்து புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், எனது மனைவிக்கு சனிக்கிழமை இரவு எட்டு மணிக்கு பிரசவம் ஆகிவிடும். தாய் நல மாக உள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதி காலை இறந்துவிட்டதாக செவிலி யர்கள் கூறினர். மாநகராட்சி மருத்துவ மனையில் இரவுப் பணியில் மருத்து வர்கள் இல்லை, செவிலியர்கள் மட்டுமே இருந்தனர். எனது மனைவி யின் வாயிலும் காயங்கள் உள்ளன. செவிலியர்கள் அளித்த தவறான சிகிச்சையால் மனைவி உயிரிழந்து விட்டார். எனது மனைவியின் மர ணத்தில் சந்தேகம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ச.விசாகனிடம் கேட்ட போது, கர்ப்பிணி இறந்தது தொடர்பாக முதல்கட்ட விசாரணைக்கு உத்தரவி டப்பட்டுள்ளது. உதவி நகர் நல அலு வலர் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை அடிப்படையிலும், உடற் கூராய்வு அறிக்கை அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்படும். பிர சவத்தின்போது கர்ப்பிணிகள் உயி ரிழப்பு நேரும் பட்சத்தில் மாவட்ட ஆட்சி யர் தலைமையிலான பிரசவ இறப்பு தணிக்கைக்குழுவும் விசாரணை நடத்தவுள்ளது. விசாரணையில் ஊழி யர்கள் மீது தவறு இருப்பது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சாலைப் பணியை தனியாருக்கு கொடுக்க எதிர்ப்பு
மதுரை, செப்.15- சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிக் காலத்தை பணிக்காலமாக முறைப் படுத்தி உத்தரவிட வேண்டும். சாலை பராமரிப்புப் பணியை தனியா ருக்கு கொடுக்கக்கூடாது என தமிழ் நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் தமிழக அரசை வலி யுறுத்தியுள்ளது. அமைப்பின் மதுரை மாவட்டப் பேரவை த.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் ஜெய ராஜராஜேஸ்வரன் துவக்கி வைத்தார். வே.சோலையப்பன் வேலையறிக்கை யையும் க.கணக்கன் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணி யன், மாநிலப் பொருளாளர் இரா.தமிழ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நா. முருகன் நன்றி கூறினார்.
துப்புரவுப் காலிப் பணியிடங்களை நிரப்பிடுக! ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை மாநாடு கோரிக்கை
விருதுநகர், செப்.15- நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள துப்பு ரவுத் தொழிலாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பாதாளச் சாக்கடை அடைப்பு எடுக்க நவீன இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும். தின;f Tலி, சுய உதவிக்குழு தொழிலாளர்களை நிரந்த ரப்படுத்த வேண்டும் என ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் (சிஐடியு) சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விருதுநகரில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஆர்.விஜய பாண்டி தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் வேலை யறிக்கை சமர்ப்பித்தார். சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் ஜி.வேலுச்சாமி வாழ்த்துரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் தேர்வு : ஏழு பேர் கொண்ட நக ராட்சி துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தின் அமைப்புக்குழு தேர்வு செய்யப்பட்டது. கன் வீனராக ஆர்.விஜயபாண்டி தேர்வு செய்யப் பட்டார். ஐந்து பேர் கொண்ட பேரூராட்சி துப்பு ரவுத் தொழிலாளர் சங்க அமைப்புக்குழு தேர்வு செய்யப்பட்டது. கன்வீனராக ஆர்.அண்ணாத் துரை தேர்வு செய்யப்பட்டார்.