‘நீட்’ ஆள்மாறாட்ட வழக்கு உதித் சூர்யாவின் முன் ஜாமீன் மனு ஜாமீன் மனுவாக ஏற்பு!
மதுரை, அக்.2- நீட் தேர்வு ஆள் மாறாட்டவழக்கில், மருத்துவ மாணவர் உதித்சூர்யா வின் வயதைகருத்தில் கொண்டு, அவரதுமுன் ஜாமீன் மனு ஜாமீன் மனு வாக ஏற்றுக் கொள்ளப்படுவதாகக் கூறியுள்ள நீதிபதி ஜி.ஆர். சுவாமிநா தன் இந்தச்செயலுக்கு அவரது தந்தையே காரணம் என கருத்து தெரிவித்துள்ளார். நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர் உதித்சூர்யா தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததார். இதுதொடர்பாக தேனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதில் உதித் சூர்யா சார்பில் தம்மை கைது செய்யக்கூடாது எனக்கூறி, முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டி ருந்தது. இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,முதலில் மாணவர் உதித்சூர்யாவை காவல் துறையினர் முன்னிலையில் சர ணடைய அறிவுறுத்தியிருந்தார். ஆனால், உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை காவல்துறையினர் கைது செய்து விட்டனர்.இந்த நிலையில் உதித் சூர்யா தாக்கல் செய்த மனு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மாணவரை சரண டைய அறிவுறுத்தியிருந்த நிலையில், காவல்துறை கைது செய் துள்ளதால், ஜாமீன் மனுவாக ஏற்க இயலாது என் றார். அப்போது குறுக்கிட்ட உதித் சூர்யா வழக்கறிஞர், அவரும், அவரது தந்தையும் சரணடைய வந்தபோது தான் சிபிசிஐடி காவல்துறையால் கைது செய்யப் பட்டதாகத் தெரிவித்தார். அப்போது நீதிபதி மாணவரின் வயது என்ன கேள்வியெழுப்பினார். வழக்கறிஞர் இருபது எனதெரிவித்தார். இந்தக் குற்றத்திற்கு மாணவ ரின் தந்தைதான் காரணம். மாண வரின் வயதைக் கருத்தில் கொண்டு, அவரது முன் ஜாமின் மனு, ஜாமின் மனுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது எனக் கூறி, விசாரணையை அக் டோபர் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இடைத்தேர்தல் பணிக்கு சென்ற காவலர் தற்கொலை
திருநெல்வேலி, அக். 2- நாங்குநேரி இடைத்தேர்த லுக்கு பாதுகாப்புப் பணிக்குச் சென்று கொண்டிருந்த காவலர் விஷம் குடித்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரியகுளம் வட்டம், தென்கரை போலீஸ் ஸ்டேஷ னில் காவலராக பணியாற்றி வந்தவர் கங்காதரன்,31. தேனி மாவட்டத்தில் இருந்து சுமார், 120 பேர் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக செவ் வாய்க்கிழமை இன்ஸ்பெக்டர் ஷாஜகான் தலைமையில் சென்று கொண்டிருந்தனர். அதில் ஒரு பேருந்தில் வந்த காவலர் கங்காதரன், விருது நகர் அருகே வரும் போது வாந்தி எடுத்துள்ளார். விசாரித்த போது அவர், விஷமருந்தியது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவருக்கு சாத்தூர் அரசு மருத் துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கங்காதரன் உயிரி ழந்தார்.தகவல் அறிந்து கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெப ராஜ் அரசு மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டார். இது குறித்து தென்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘நெற்பயிருக்கு துத்தநாக சத்து அவசியம்’ வேளாண்துறை விளக்கம்
தஞ்சாவூர், அக்.2- நெற்பயிருக்கு துத்தநாக சத்தின் அவசியம் குறித்து வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மாலதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெற்பயிருக்கு நடவு வயலில் இரண்டு முதல் ஐந்து சென்டிமீட்டர் வரை விவசாயிகளால் நீர் பரா மரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறாக நீரில் மூழ்கி உள்ள நிலங்களில் துத்தநாக சத்து குறைந்த அளவே பயிருக்கு கிடைக்கிறது. நெற்பயி ரில் துத்தநாக அளவு குறையும் போது இளம் இலைகளில் நடு நரம்பு பச்சையமின்றி காணப்படும், வயலில் பயிர்கள் வளர்ச்சி குறைந்தும் சீரற்ற நிலையிலும் காணப்படும். பயிர் முதிர்ச்சி அடைவது தாமதப்படுவதால் பயிரின் வயதுஅதிகமாகும். துத்தநாக சத்து பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கும் இடங்க ளில் பயிர்கள் அழிந்துவிடும். சில இடங்களில் பாதிக் கப்பட்ட வயல் திட்டு திட்டாக தோற்றமளிக்கும்.