அவனியாபுரத்தில் தீ விபத்து
மதுரை, அக். 28- மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக பழைய கார் உதிரி பாகங்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வில்லாபுரம் வீட்டுவசதி வாரியக்குடியிருப்புப் பகுதியில் ஷேக்அப்துல்லா என்பவருக்குச் சொந்தமான இடத்தில் ஜெயந்தி என்பவர் பாலா கேபிள் நெட்வொர்க் நிறுவனம் நடத்தி வருகிறார். பழைய கார் உதிரிபாகங்களையும் அங்கு வைத்துள்ளார். ஞாயிறன்று தீபாவளியையொட்டி அனைத்து இடங்களி லும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு ஒன்று கார் உதிரிபாகக் குடோனில் விழுந்து தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த அனுப்பானடி தீய ணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இன்று சமையல் எரிவாயு குறைதீர் கூட்டம்
இராமநாதபுரம், அக்.28- இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம், இராமே ஸ்வரம், திருவாடானை, கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம், பரம க்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு ட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் குறைகள், கோரிக்கைகளை தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள், எரிவாயு முகவர்கள் பங்கேற்றும் எரிவாயு குறைதீர் கூட்டம் அக்.29-ஆம் தேதி (செவ்வாய்) மாலை 3 மணிக்கு இராம நாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில்மாவட்ட வருவாய் அலுவ லர் தலைமையில் நடைபெறுகிறது. பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இந்தத் தகவலை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தெரி வித்துள்ளார்.