கரூர் காவல் கண்காணிப்பாளரின் பணியிட மாறுதலை திரும்ப பெறக் கோரிய வழக்கு தள்ளுபடி
மதுரை, ஜூலை 16 - கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தி ருந்தார். அதில்,” கரூர் மாவட்டக் காவல்துறைக் கண்கா ணிப்பாளராக கடந்த மே 11-ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட விக்ரமனுக்கு சென்னை கணினி துறைக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. கந்துவட்டிக் கொடுமைகளைக் கட்டுப்படுத்தியது, மணல் திருட்டைத் தடுத்தது, சட்டவிரோத புகையிலை போதை பொருட்கள் விற்பனையைத் தடுத்தது போன்ற பல்வேறு நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்த காவல் கண்காணிப்பாளர் விக்கிரமனுக்கு இடமாறுதல் வழங் கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதற்குப் பின்னால் அரசியல் தலைவர்களின் வற்புறுத்தல் இருப்பதாகக் கூறப்படு கிறது. இந்த நிலையில், அவருக்குப் பதிலாக பாண்டியராஜன் என்பவர் கரூர் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள் ளார். இவர் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானவர். பொள் ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை முறையாகக் கை யாளவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்ட தோடு, 2017- ஆம் ஆண்டு நீதிமன்றம் இவருக்கு அபராதமும் விதித்துள்ளது. அதேபோல டாஸ்மாக்குக்கு எதிராக அமைதி யான முறையில் போராடிய பெண் ஒருவரின் கன்னத்தில் அறைந்த சர்ச்சையிலும் இவர் சிக்கினார். கரூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளோடு உள்ள அதிகாரி கள் பலருக்கு இடமாறுதல் வழங்கவில்லை. உதாரணமாக கரூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பல குற்றச்சாட்டுகளோடு, 13 ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தி லேயே பணியாற்றி வருகிறார். ஆனால் நல்ல முறையில் பணியாற்றி, பல நல்ல மாற்றங்களை கொண்டு வந்த காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் அரசியல் உள்ளிட்ட பல கார ணங்களுக்காக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதனை ஏற்க இயலாது. ஆகவே அவருடைய இடமாறுதலை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை செவ்வாயன்று விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு, இதை பொதுநல வழக்காகத் தாக்கல் செய்ய முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்பாக தமிழக காவல் துறைத் தலைவர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தர விட்டனர்.
பருவமழையைப் பயன்படுத்தி பசுந்தாள் விதைகளை விதைக்க அறிவுறுத்தல்
புதுக்கோட்டை, ஜூலை 16- தற்பொழுது பெய்து வரும் பருவமழையைப் பயன் படுத்தி பசுந்தாள் உரப்பயிர் விதைகளை விதைக்க விவ சாயிகள் முன்வர வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுப்பையா அறிவுறுத்தி யுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது பரவலாக பருவமழை பெய்து வரு கிறது. வருகிற சம்பா பருவத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ள விருக்கும் விவசாயிகள் தரிசாக உள்ள தங்கள் நிலங்களை இம்மழையினைப் பயன்படுத்தி உழவு செய்து பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப்பூண்டு அல்லது சணப்பு விதை களை விதைத்து மடக்கி உழுவதால் மண்வளம் அதிகரித்து நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெறலாம். பசுந்தாள் உரப்பயிர் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு தேவை யான 20 கிலோ பசுந்தாள் உரப்பயிர் விதைகளை விதைக்க வேண்டும். பின்னர், நன்கு வளர்ந்தவுடன் பூப்பூக்கும் தரு ணத்தில் பசுந்தாள் உரப்பயிர்களை மடக்கி உழவு செய்ய வேண்டும். பசுந்தாள் உரப்பயிர்கள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை கிரகித்து வேர்முடிச்சுகளில் ரைசோபியம் என்ற நுண்ணுயிர்களின் துணையுடன் நிலை நிறுத்துகின்றன. பசுந்தாள் உரப்பயிர்களை மடக்கி உழவு செய்வதனால் தொடர்ந்து வரும் பயிர்களுக்கு தழைச்சத்து கிடைக்கிறது. இவ்வாறு மடக்கி உழவு செய்த வயல்களில் அங்ககச்சத்து அதிகமாகும். இதனால் மண்ணில் நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிக மாகி மண்வளம் மேம்படுகிறது. பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்வதால், மண்ணிற்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும். மண்ணில் வாழும் நுண்ணு யிர்களுக்கு உணவாகப் பயன்படும். மண்ணின் பவுதீக மற்றும் ரசாயனத் தன்மைகளை மேம்படுத்துகிறது. மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது. மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறன் மேம்படு கிறது. எனவே, விவசாயிகள் தங்கள் நிலங்களில் பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து மண்வளத்தை மேம்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்
தரங்கம்பாடி, ஜூலை 16- தமிழக முதல்வர் குடிமராமத்து திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் தூர்வாரும் பணி நடைபெற்று வரு கிறது. இதனைத் தொடர்ந்து தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் உள்ள சங்கரன்பந்தல், விசலூர் ஆகிய ஊர்களில் ரூ. 21 லட்சம் செலவில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் ஆசைத்தம்பி மேற்பார்வையில் பொறையார் உதவி செயற்பொறியாளர் சண்முகம், உதவிப்பொறியாளர் குணசேகரன், திருவிடைக் கழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நீர்நிலைகள் தூர்வா ரும் பணி தொடங்கியது.