tamilnadu

img

ம.சு. பல்கலை., சிண்டிகேட்: மூட்டா வெற்றி

திருநெல்வேலி, ஆக.5- ம.சு.பல்கலைக்கழக சிண்டிகேட் தேர்தலில் மூட்டா வெற்றி பெற்றது. நெல்லை மனோன்மணீ யம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின், இணைப்பு கல்லூரிகளைச் சேர்ந்த 2 ஆசிரியர்களை, சிண்டிகேட் உறுப்பினர்களாக தேர்ந்தெ டுப்பதற்கான தேர்தல் வெள்ளியன்று நடைபெற்றது.  மூட்டா சார்பில் வ.உ.சி., கல்லூரி பேராசிரியர் நாக ராஜன், நாகர்கோவில் எஸ்.டி. இந்து கல்லூரி பேரா சிரியர் ராஜா ஜெயசேகர்  ஆகியோர் போட்டியிட்ட னர். இதே போல் பாளை  சேவியர் கல்லூரி பேராசிரி யர் ராஜா, திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி பேராசிரியர் ஜெகதீஷ் ஆகி யோரும் போட்டியிட்டனர்.  தேர்தலில் மூட்டா சார்  பில் போட்டியிட்ட பேராசிரி யர்கள் நாகராஜன், ராஜா ஜெயசேகர் ஆகியோர் அமோக வெற்றி பெற்றனர்.  வெற்றி பெற்ற பேராசிரி யர்களுக்கு மூட்டா நிர்வாகி கள், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.