சென்னை, மார்ச் 2- மதச்சார்பற்ற சக்திகள் அனை வரும் ஓரணியில் திரண்டு போராடு வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பிறந்தநாள் விழாவில் தலை வர்கள் அறைகூவல் விடுத்தனர். எனது பிறந்தநாள் பொதுக்கூட்டம் இந்தியாவுக்கான புதிய அரசியல் மேடையாக அமைந்துள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை யில் புதனன்று (மார்ச் 1) நடைபெற்றது. திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார். இதில் முதலமைச்சர் பேசுகையில், அண்ணாவைப் போல் பேசத் தெரியாது, கலைஞரை போல் எழுதத் தெரியாது, ஆனால் அவர்களைப் போல் உழைக்கத் தெரியும். தேர்தல் அறிக்கையில் வழங்கிய 505 வாக்குறுதிகளில் 85 விழுக்காடு நிறைவேற்றியுள்ளோம்; எஞ்சிய வாக்குறுதிகள் ஓராண்டில் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறினார். எனது பிறந்த நாள் பொதுக்கூட்டம் இந்தியாவுக்கான புதிய அரசியல் மேடையாக அமைந்துள்ளது. காங்கி ரஸ் அல்லாத கூட்டணி கரை சேராது. தேர்தலுக்கு பிறகு கூட்டணி என்பதும் சரிவராது. பாஜகவை எதிர்க்க அனைத் துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியில் நிற்க வேண்டும். காங்கி ரஸ் அல்லாத கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும்.
ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவ மனை அறிவித்துவிட்டு ஒரு செங்கல் கூட வைக்காமல் கேவலப்படுத் திக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டை அவமானப் படுத்துகிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தயக்கம் காட்டுகிறார்கள். மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்பதால் ஒப்பு தல் கொடுக்காமல் இருக்கிறார்களா என கேள்வி எழுப்பினார். நாம் கொள்கை யுத்தம் தொடுத்துக் கொண் டிருக்கிறோம். போர் வியூகம் வகுக் கும் பாசறை கூட்டமாக இந்த பிறந்த நாள் கூட்டம் அமைந்துள்ளது. இப்போதே விதைப்போம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறுவடைக் காலமாக இருக்கட்டும். களம் நமக்காக காத்திருக்கிறது. நாற்பதும் நமதே, நாடும் நமதே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மல்லிகார்ஜுன கார்கே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், திமுகவும், காங்கிரசும் கொள்கை ரீதியாக இணைந்திருக்கிறது. 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தல் வெற்றிக்கும், 2006, 2021 சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வழிவகுத்தது. 2024 மக்க ளவை தேர்தல் வெற்றிக்கு நமது கூட்டணி தொடரும் என்றார். ஒன்றிய பாஜக அரசு தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களி டையே பிரிவினையை ஏற்படுத்து கிறது. ஆனால் அதற்கு தமிழ்நாடு ஒரு அங்குலம் கூட இடம் தராது. பாஜக அரசு, நீதித்துறை, தேர்தல் ஆணை யம் உள்ளிட்ட முகமைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புகிறது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்றவும் முயற்சிக்கிறது. அதை தடுக்க அனைவரும் ஒன்றி ணைந்து போராடுவோம் என்றார்.
அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவர், தான் ஒரு நாத்திகவாதி என வெளிப்படை யாக அறிவித்துள்ளார். அதே நேரம், அவர் எந்த மத நம்பிக்கைக்கும் எதிரா னவர் கிடையாதவர் எனவும் தெளிவு படுத்தியுள்ளார். சமூக நீதி, சமத்துவம் மற்றும் மறுமலர்ச்சிக்காக அவர் ஆற்றி வரும் பணிகள் பாராட்டுக்குரி யது என்றார்.
பரூக் அப்துல்லா
ஜம்மு, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசுகை யில், இந்தியா தற்போது கடினமான சூழலில் உள்ளது. ஜனநாயகம், அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. வலு வான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே காஷ்மீருக்கும், தமிழ்நாட்டிற்கும் பொதுவான ஒன்றாக உள்ளது. மக்கள் அமைதியாக வாழ நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்றார்.
தேஜஸ்வி யாதவ்
பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், தற்போது நாட்டின் மிகப்பெரும் பிரச்சினைகளாக வேலையின்மை, பணவீக்கம் இருக்கிறது. பாஜக ஆட்சியில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் அமலில் இருப்பது போலவே இந்த ஆட்சி இருக்கிறது. அதனால் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒரே குடை யின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று அவர் பேசினார்.
மாநிலத்தலைவர்கள்
இதில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனித மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட னர்.