tamilnadu

img

எம்.ஏ.பேபிக்கு ‘பத்ம பூஷண் மார் கிறிசோஸ்டம்’ விருது

எம்.ஏ.பேபிக்கு ‘பத்ம பூஷண் மார் கிறிசோஸ்டம்’ விருது

விருதுத் தொகையை நன்கொடையாக திருப்பி அளித்தார்

பத்தனம் திட்டா, ஏப்.27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபிக்கு, பத்ம  பூஷண் மார் கிறிசோஸ்டம் அறக்கட்டளை விருது வழங்கப்பட்டது. ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கத்துடன், கலைஞர் பட்டத்திரி வடிவமைத்த கேட யம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகிய வற்றைக் கொண்ட இந்த விருதுக்கு அர சியல், சமூக மற்றும் கலாச்சாரத்துறை களில் சிறந்து விளங்கியவர்கள் பரி சீலிக்கப்பட்டனர். பிலிப்போஸ் மார் கிறைசோஸ் அறக் கட்டளையால் நிறுவப்பட்ட இந்த முதல் விருத்தை, கேரள முதல்வர் பினராயி விஜ யன் வழங்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலளார் எம்.ஏ. பேபி பெற்றுக் கொண்டார். அத்துடன் விருதுத்  தொகையை, முதலமைச்சரின் நிவாரண  நிதிக்கும், மார் கிறிசோஸ்டம் அறக்கட்ட ளைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் விகிதம் நன்கொடையாக வழங்கினார். எம். ஏ. பேபிக்கு, மார் கிறிசோஸ்டம் நெருங்கிய நண்பர் ஆவார். ‘பிலிப்போஸ்  மார் கிறிசோஸ்டம் தி கிரேட் மெட்ரோ பொலிட்டன்’ என்ற தலைப்பில் ஒரு புத்த கத்தையும் எழுதியுள்ளார். இந்தப் புத்த கம் ‘கிறிஸ்து, மார்க்ஸ், ஸ்ரீ நாராயண குரு’  என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.