சென்னை, பிப்.23- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிப்.24 மற்றும் 25 ஆகிய 2 நாட்கள் வீதி வீதி யாக சென்று பிரச்சாரம் செய்ய முதலில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பிரச்சார சுற்றுப்பயணத்தில் இப் போது மாற்றம் செய்யப் பட்டு சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை (பிப்.24) மாலை விமானம் மூலம் கோவை செல்லும் முதல மைச்சர் அங்கிருந்து கார் மூலம் ஈரோடு சென்று சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அங்கு கட்சி யின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொகுதியின் பொறுப்பு அமைச்சர்களை சந்தித்து தொகுதி நில வரங்களை கேட்டறிகிறார். அடுத்த நாள், சனிக் கிழமை காலையில் வீதி வீதி யாக சென்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி சுற்றுப்பயண விவரம் வருமாறு:- சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகை அருகே உள்ள சம்பத் நகரில் காலை 9 மணிக்கு பிரச்சாரத்தை துவக்கு கிறார். பெரிய வலசு வழியாக செல்லும் அவர் பாரதி திரையரங்கம், சக்தி ரோடு, பேருந்து நிலையம், மெட்ராஸ் ஓட்டல், மஜீத் வீதி, மேட்டூர் ரோடு, பன்னீர் செல்வம் பூங்கா சென்று பெரி யார் நகரில் முடித்துக் கொண்டு கோவை வழியாக மீண்டும் சென்னை திரும்பு கிறார்.