tamilnadu

img

பாசமிகு அன்னை தோழர் நாகரத்தினம்

1948 கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்ட காலத்தில், கட்சித் தலைவர்  கள் தலைமறைவாக இருந்து செயல் பட்டனர்.அன்று ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தின் கம்யூனிஸ்ட் கட்சி  அலுவலகம் சேலம் செவ்வாய்  பேட்டை பிரதான சாலையில்  இருந்தது. கட்சி தடைசெய்யப் பட்ட காலத்தில் சேலத்தில் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்திருக்கும் ஏற்பாட்டிற்கு டாக்டர் அண்ணாஜி, நாகரத்தினம்  அவர்களை நியமித்தார். 18 வயதே  ஆன நாகரத்தினம் கட்சி அலு வலகத்தை தினமும் திறந்து வைத்து காலை முதல் மாலை வரை  அமர்ந்திருந்தார். நெருக்கடி மிகுந்த அந்த காலத்  தில் இப்பணியை செய்வதற்கு துணிச்சல் தேவை. அத்தகு துணிச் சல் நாகரத்தினம் அவர்களுக்கு இளம் வயதிலேயே இருந்தது. இந்த  செய்தியை அறிந்த காவல் துறை, அவரை தேட ஆரம்பித்தது. நாக ரத்தினம் தலைமறைவானார். அ ணாஜி அவரை பெங்களூரில் தங்க வைத்தார்.

இளம் வயதிலேயே ஆறு மாத காலம் அவர் தலைமறை வாக இருக்க வேண்டி வந்தது. 1949 செப்டம்பரில் அண்ணாஜி யின் துணைவியார் லலிதா அவர்  கள் காலமானார்.லலிதா அவர்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டில் மாநி லக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். தோழர் லலிதா அவர்களின் மறைவுக்கு பின் தோழர்.பி.ராம மூர்த்தி அவர்களின் ஆலோச னைப்படி டாக்டர் அண்ணாஜி‌, நாக ரத்தினம் அவர்களை திருமணம் செய்து கொண்டார். சீர்திருத்த முறையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. அண்ணாஜி-லலிதா ஆகியோரின் குழந்தை களை தோழர் நாகரத்தினம் தாயன்  போடு வளர்த்தார். மருத்துவமனை யை கவனித்துக் கொண்டார். செவி லியர் பட்டதாரியான நாகரத்தினம் குறுகிய காலத்திலேயே பயிற்சி பெற்று மருத்துவப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். டாக்டர் அண்ணாஜியோடு இணைந்து மக்களுக்கு மருத்துவ சேவை செய்தார்.

அண்ணாஜியுடன் இணைந்து கம்யூனிஸ்ட் லட்சியங்களை ஏற்  றுக்கொண்ட நாகரத்தினம் கட்சிப் பணிகளிலும் ஈடுபட்டார்.கிரா மங்களுக்குச் சென்று மக்களுடன் விவாதிப்பார்.கிராமக்கூட்டங்க ளில், பொதுக்கூட்டங்களில் பேசு வார். குடும்பத்தை, மருத்துவ மனையை கவனித்துக் கொண்டே கட்சிப் பணிகளிலும் தன்னை ஈடு படுத்திக் கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உருவான போது, அவரும் தன்னை  இணைத்துக் கொண்டு இறுதி வரை கட்சி உறுப்பினராக செயல்பட் டார்.  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட தலை வராக, சிபிஐ(எம்) கிருஷ்ணகிரி வட்டக்குழு உறுப்பினராக இருந்து  செயல்பட்டார். கட்சி தோழர்கள் எப்போதும் அவர் இல்லத்தில்  உணவருந்துவார்கள். கட்சித் தலைவர்களை வீட்டுக்கு அழைத்து அவரே சமைத்துப் பரி மாறுவார்.  மார்க்சிஸ்ட் கட்சியின் மீதும்,  கட்சி தலைவர்கள் மீதும் எப்போ தும் பாசத்துடன் இருப்பார்.

உடல்  நலம் குன்றுகிற‌ வரை கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவர்  உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு  தன் வீட்டில் வைத்திருந்த பொருட்  களை கட்சியிடம் கொடுத்து விட்டார். டாக்டர் அண்ணாஜி நடத்தி வந்த மக்கள் மருத்துவமனையை கட்சியிடம் ஒப்படைத்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட  நாகரத்தினம் அவர்கள் அவரது பேரன் டாக்டர் ஜோ பாதுகாப்பில் இருந்தார்.  தோழர் நாகரத்தினம் தீவிரமான தீக்கதிர் வாசகர். கட்சித் தோழர் கள் அனைவரும் தீக்கதிர் கட்டா யம் வாசிக்க வேண்டும் என்று வலி யுறுத்துவார். உடல்நலம் பாதிக்கப்பட்டி ருந்த தோழர் நாகரத்தினம் அவர்  கள் தனது 92 ஆவது வயதில் கிருஷ்ணகிரியில் 28-10-2022 மாலை காலமானார். அவருக்கு செவ்வணக்கம்.

- டி.ரவீந்திரன்