விண்டோ ஷாப்பிங் தெரியும்... வாங்கும் நோக்கமின்றி, பொருட்களை வேடிக்கை பார்ப்பது! அதென்ன ஃபோரம் ஷாப்பிங்? நாம் எதிர்பார்க்கிற தீர்ப்பு எங்கு கிடைக்குமோ, அங்கே போய் வழக்குத் தொடுப்பதற்குப் பெயர்தான் ஃபோரம் ஷாப்பிங். உதாரணமாக, நீதிமன்ற எல்லை கள் குறித்த வரையறைகள் அமெரிக்கா வில் வசதியாக இருப்பதால் அமெ ரிக்க நீதிமன்றங்களிலும்; நற்பெய ருக்குக் களங்கம் விளைவித்தல் போன்றவற்றுக்குக் கடுமையான சட்டங்கள் மற்றும் மண விலக்குக்கு எளிமையான வழிகள் என்றிருப்பதால் இங்கிலாந்து நீதிமன்றங்களிலும் வெளிநாட்டினர்கூட வழக்குத் தொடுக்கிறார்கள். நாடுகளேகூட, ஒன்றிற்கு மேற்பட்ட அமைப்புகளில் உறுப்பினராக இருக்கும்போது, தங்களுக்குச் சாதக மான தீர்வு கிடைக்கும் என்று எதிர் பார்க்கிற அமைப்பில் தங்கள் பிரச்ச னையை எழுப்புவதையும் ஃபோரம் ஷாப்பிங் என்றுதான் அழைக்கிறார்கள். சரி... இப்போது எதற்கு அது...? சனாதன ஒழிப்பு மாநாடு எங்கு நடைபெற்றது? சென்னையில். உதயநிதி வசிப்பது எங்கே? சென்னையில். ஆனால் புகார் எங்கே கொடுக்கப் பட்டிருக்கிறது? தில்லியில்!
கடன் வாங்கி ஏமாற்றி விட்டு, ஓடிப் போன மோடிகளைப் பற்றி ராகுல் பேசியது எங்கே? பெங்களூரில். ராகுல் வசிப்பது எங்கே? தில்லியில். ஆனால் வழக்குத் தொடுக்கப் பட்டது எங்கே? குஜராத்தில்! அவ்வளவுதான்! இதற்குப் பெயர்தான் ஃபோரம் ஷாப்பிங்! தில்லியில் புகார் கொடுத்தவரும் இந்த சனாதன எதிர்ப்பு மாநாட்டிற்கு வந்திருந்து கேட்கவில்லை. குஜராத்தில் வழக்குத் தொடுத்தவரும் பெங்களூரு வந்திருந்து ராகுலின் உரை யைக் கேட்கவில்லை. நிகழ்ச்சி நடந்த இடத்திலோ, குற்றம் சாட்டப்படுபவர் வசிக்குமிடத்திலோ வழக்கைத் தொடுத்துக்கொள்ள அறி வுறுத்தாமல் வழக்கை ஏற்று, சாட்டப் பட்ட நற்பெயருக்குக் களங்கம் விளை வித்தல் என்ற குற்றத்திற்கு அந்தச் சட்டம் இயற்றப்பட்ட காலத்திலிருந்தே யாரும் விதித்திராத அதிகபட்சத் தண்டனையை எந்த நீதிபதி விதிப்பார் என்று தேர்ந்தெடுத்து ராகுல்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது என்பது தான் உண்மை. இப்போதும் அதே ஃபோரம் ஷாப்பிங்தான் உதயநிதி மீது செய்யப் படுகிறது. எனவே, விளைவு எப்படி யிருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால், இறுதி வெற்றி உதயநிதிக்கே என்பதை முந்தைய ராகுல் வழக்கு விளக்கி யிருக்கிறது. அவ்வளவுதான்!
- அறிவுக்கடல்