tamilnadu

img

பீக் ஹவர் கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும்

கோயம்புத்தூர்/ மதுரை, செப்.25- உயர்த்தப்பட்ட நிலைக்கட்ட ணம் மற்றும் பீக் ஹவர் கட்டத்தை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று கோவையில் தொழில் துறையினர் கதவடைப்பு போராட்டத் த்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கோவை தொழில் துறையினர் கூறுகையில், கடந் தாண்டு உயர்த்தப்பட்ட மின் கட்ட ணத்தால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே, தங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற தமிழ்நாடு முதல்வர் முன்வர வேண்டும், என்றனர். மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அந்தந்த மாவட்ட தொழில் அமைப்பு கள் முதல்வரின் கவனத்திற்கு இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி வருகின்றனர். அதேபோல் கோவையிலும், கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற வழிவகை செய்ய வலியுறுத்துமாறு கொடிசியா தலைவர் திருஞானம் தலைமையில் தொழில்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  

மதுரையில் உண்ணாவிரதம்

மின்கட்டண உயர்வை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி தமிழ் நாடு தொழிற்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே திங்களன்று மாபெரும் உண்ணா விரதப் போராட்டம் மடீட்சியா தலை வர் ஆர்.எம்.லட்சுமி நாராயணன் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தில் தமிழ்நாடு  தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர்கள் பொன்குமார், ரகுநாத ராஜா, திருமுருகன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர், தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர், தமிழ்நாடு ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க  தலைவர் முத்துரத்தினம், ஆர்டிஎப் தலைவர் ஜெயபால், தமிழ்நாடு ஊறுகாய் பொட்டல உற்பத்தியா ளர்கள் சங்கம் தலைவர் ஆர்.செல்வ ராஜ், செயலாளர் ஜி.கந்தசாமி, பொருளாளர் அஜ்மல் கான் மற்றும் 700-க்கும் மேற்பட்ட சிறு தொழில் முனைவோர்கள். தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக் குழு உறுப்பினரும் மதுரை மாநகராட்சி துணை மேய ருமான தி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநி லக் குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் ஜா.நரசிம்மன், எஸ்.அழ கர்சாமி ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.