tamilnadu

மோடியின் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு

அகர்தலா, மார்ச் 4 - பிரதமர் மோடியின்  ஆவாஸ் யோஜ னா திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கு வதில் முறைகேடுகள் நடந்ததை கண்டித்து திரிபுரா மாநிலம் சிங்கர்பில் ஊராட்சி அலுவலகத்திற்கு கிராம மக்கள் பூட்டு போட்டனர். இருநூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய கையோடு அலு வலகத்தை பூட்டினர். 15 நாட்களுக்குள் வீட்டை வழங்கவேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்ட த்தின் கீழ்  240 குடும்பங்கள் வீடுகள் கேட்டு அதற்கான ஆவணங்களை அளித் துள்ளனர். ஆனால், ஊராட்சி அதிகாரி களின் அலட்சியத்தால், வீடுகள் முறையாக வழங்கப்படவில்லை. விண்ணப்பித்த 240 பேரில் 40 பேர் மட்டுமே வீடுகளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மற்றவர்கள் வீடுகள் குறித்து கேட்டதற்கு   ஆவணங்களை தில்லிக்கு அனுப்பியுள்ளதாக அதி காரிகள் கூறியுள்ளனர். ஆனால் இன்று  வரை வீடு கிடைக்கவில்லை எனக் கூறும் மக்கள் கடந்த நான்கு ஆண்டு களாக சிங்கர்பில் ஊராட்சியிலிருந்து தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்கின்றனர்.