59 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.4.57 கோடி கடனுதவி வழங்கல்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஐந்து இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடை பெற்றது. அதில் 59 மகளிர் சுய உதவி களுக்கு ரூ.4 கோடியே 57 லட்சம் கடனு தவியை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார். நாச்சியார்கோவிலில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகா மில் மொத்தம் 59 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 4,57,097 ஆயிரம் மதிப்பி லான கடனுதவிகள் வழங்கப்பட்டன.
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக திருவாரூர் திருவிக கல்லூரி வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கல்லூரி கிளை தலைவர் செல்வா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பா.லெ.சுகதேவ், மாவட்ட துணை தலைவர் வீ.சந்தோஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.