சென்னை, மார்ச் 4 - வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க கூடாது என வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், மேகமலை வனப்பகு திக்குள் கால்நடைகளை மேய்ச்சலு க்காக அழைத்துச் செல்லப்படுவதா கவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு, மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு கால்நடைகளை அழைத்துச் செல்வதால் வன விலங்கு களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, தமிழகம் முழுவதும் வனப்பகுதி களுக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.இதற்கிடையில், வனக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்த வழக்கும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், சிபிஐ - எஸ்.பி நிர்மலா தேவி, டிஎஸ்பி சந்தோஷ்குமார், ஆகாஷ்குமார் உள்ளிட்ட நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டது.ஏற்கனவே தமிழக அரசு, தமிழக வன பயிற்சி கல்லூரி முதல்வர் ராஜ்மோகன் மற்றும் வைகை அணை நக்சல் தடுப்பு படை கூடுதல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ் ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவில் நியமிக்க பரிந்துரைத்துள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். கேரள அரசு அதிகாரியை பரிந்துரைக்காததால், சிறப்பு புலனாய்வு குழு நியமனம் தொடர்பாக இறுதி முடி வெடுக்க ஏதுவாக வழக்கு விசாரணை யை மார்ச் 17 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.