tamilnadu

img

பட்டியலின வாலிபர், பெண்கள் மீது சாதி ஆதிக்க கும்பல் கொடூரத் தாக்குதல்  - பைக்கில் ஹாரன் அடித்துச் சென்றதால்  ஆத்திரம்

பட்டியலின வாலிபர், பெண்கள் மீது சாதி ஆதிக்க கும்பல் கொடூரத் தாக்குதல் 

பைக்கில் ஹாரன் அடித்துச் சென்றதால்  ஆத்திரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

 இராமநாதபுரம், மே 30- இராமநாதபுரம் மாவட் டம், இளமனூரில் பட்டிய லின வாலிபர்கள், பெண் களை கடுமையாகத் தாக்கிய சாதி ஆதிக்க கும்பலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டித் துள்ளது.அனைவரையும் கைது செய்து,கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட் டம், இளமனூர் மேற்குதெரு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் . இவரது மகன் முனீஸ்வரன்  ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இதே ஊரைச் சேர்ந்த சாதி ஆதிக்க நபர்களான 7  இளைஞர்கள் மே 27 அன்று  இரவு 7 மணி அளவில் இள மனூர் சாலையை மறித்து அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப் போது இருசக்கர வாகனத்தில் வந்த முனீஸ்வ ரனுக்கு வழி விடாததால் அவர் ஹாரன் அடித்தபடி ஓர மாக கடந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல்  மேலும் 20 பேரை சேர்த்துக்கொண்டு, முனீஸ்வரனின் வீட்டிற்கு வந்து கதவை உடைத்தனர். பின்னர் அவரை வெளியே இழுத்து வந்து ,சாதியைச் சொல்லி இழிவாகப் பேசி கடுமையாக தாக்கினர். இதை தடுத்த உறவுக்கார பெண்களையும் நைட்டி யை கிழித்து இழிவு படுத்தியுள்ளனர். இவர்க ளது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த முனீஸ்வரனின் நண்பர்கள், ஊர் தலைவர் என அனைவரையும் தாக்கி யுள்ளனர்.   தாக்குதலில் காய மடைந்த முனீஸ்வரனை இராமநாதபுரம் அரசு மருத் துவமனையில் சேர்த்தனர்.  நேரில் சென்ற சிபிஎம் தலைவர்கள் இந்த தகவல் அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஆர்.குருவேல், மாவட்டக்குழு உறுப்பினர் பி.செல்வராஜ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டச் செயலா ளர் நா.கலையரசன், ஜன நாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இ. கண்ணகி ஆகியோர் மருத் துவமனைக்குச் சென்று விசா ரித்து ஆறுதல் கூறினர்.  முனீஸ்வரன் காவல் துறைக்கு வாக்குமூலமாக கொடுத்த புகாரின் அடிப்ப டையில் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு,  இரண்டு பேரை கைது செய்துள்ளனர். பட்டியலின வாலிபர்கள் மற்றும் பெண்களை தாக்கிய சாதி ஆதிக்க கும் பலை மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி வன்மையாக கண் டிக்கிறது. அனைவரையும் கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற் ற்கு இழப்பீடு வழங்க வேண் டும் என்று வலியுறுத்தினார்.