ஊடகவியலாளர் ச.காவியா
“கவர்ன்மெண்ட் பஸ் மட்டும் இல்லேனா எனக்கு பொழப்பே இல்ல, எங்க ஊரு பெண் குழந்தை கள் எல்லாம் படிக்கவே வழியில்லாம போயிடும்”.. கண வனை இழந்து இரு குழந்தைகளை வளர்க்க நாள்தோறும் போராடும் காய்கறி விற்கும் மலையகப் பெண்ணின் சொற் கள் தான் இவை. உண்மையில் அந்தளவு அரசுப்பேருந்து கள் தமிழக மக்களுக்கு முக்கியமா? இந்த கேள்வியின் விடையை தருகிறது காம்ரேட் டாக்கீஸ் குழுவினரின் இஞ்சின் ஆப் தமிழ்நாடு (Engine of Tamilnadu) என்ற ஆவணப்படம். இந்த ஆவணப்படத்தை காமாட்சி ராமன் இயக்கியுள்ளார். ராஜேந்திர பிரசாத் (இசை), தினேஷ், அசோக் நா(காமிரா). நர்மதா (சப் டைட்டில்), பொன்னுதுரை (எடிட்டிங்) ஆகி யோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த நேரத்தில் இப்படியொரு ஆவணப்படம் எடுப்பதற்கான தேவை எங்கி ருந்து வந்தது? தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் தனியர்மயமாக்கப்பட உள்ள தாகவும் நஷ்டத்தில் போக்குவரத்துத் துறை இயங்குவதால் இம்முடிவு எடுக்கப் பட்டுள்ளதாகவும் முன்னதாக பல அதிர்ச்சி கரத் தகவல்கள் வெளியாகின. முதற்கட்ட மாக சென்னையில் ஆயிரம் பேருந்து களை இயக்க தனியாரை அனுமதிக்க ஏற்பாடு நடப்பதாகவும் படிப்படியாக தமிழகம் முழு வதும் 25 சதவீத பேருந்து போக்குவரத்து தனியார்மயமாக்கப்படும் எனவும் பேசப் பட்டன. எனினும் இதனை அரசு பின்னர் மறுத்தது. அது ஒரு புறம் இருக்கட்டும்.. ஆனால், உண்மையில் அரசுப்பேருந்துகள் தனியார்மயமானால் மக்களுக்கு என்ன பாதிப்பு? அரசு விதிக்கும் அதே கட்டணம் தானே என அதனை ஏற்றுக்கொள்ள ஏதே னும் வழியிருக்கிறதா? என்பதை எடுத்துக் காட்டுவதுதான் இந்த படத்தின் நோக்கம். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தினரின் தயாரிப்பில், காம்ரேட் டாக்கீஸ் உருவாக்கிய இந்த ஆவணப் படத்தை தமிழ்நாட்டின் போக்கு வரத்துறை அமைச்சர் சிவசங்கர் கடந்த வாரம் வெளியிட்டார்.
அரங்கம் நிறைந்த காட்சியாக சென்னை அண்ணா அரங்கில் திரையிடல் நடந்தது. மலையகக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் எளிதாக நெடுஞ்சாலைப் பகுதிக்கு வர முடியுமானால், அங்கிருந்து எங்கும் சென்று சேர முடியும். ஆனால் மலையகப் பகுதிக்கு பேருந்தை உறுதி செய்வதற்கான செலவை எதில் இருந்து செய்வது? இலாபகரமான வழித்தடங்கள் காரணமாகவே கிராமங்களில் பேருந்து வசதி உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படியாக கிராமத்துக்கும் பொதுப் போக்குவரத்துக்குமான ஆழமான தொடர்பை எளிதாக புரிந்து கொள்ளலாம். பெண்கள் அதிகம் பயிலும், உயர்நிலைப் பள்ளியில் இருந்து கல்லூரிக்குச் சேரும் மாணவர்கள் அதிகம் வசிக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது எனில், அரசுப்பேருந்தின் தேவையை அதனோடு இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. இதனைத்தான் 26 நிமிட காட்சிகளில் விளக்குகிறது இந்த ஆவணப்படம். இப்படத்தில் மலைப்பகுதி, கடற்பகுதி, சமவெளிப்பகுதி என பிரித்து அவர்தம் வாழ்வில் அரசுப்பேருந்துகளின் பங்கு குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. முதலில் மலைப்பகுதி மக்களிடம் இருந்து கதை தொடங்குகிறது. அதிகாலை கூட அல்ல, நள்ளிரவு 2 மணிக்கு அப்பெண் நாள்தோறும் எழுகிறார். பேருந்தில் காய்கறி கொண்டு சென்று நகரத்தில் விற்றுவிட்டு பின்னர் வீடு திரும்புகிறார். மற்றொரு பெண்ணோ நாள்தோறும் 16 கிலோ மீட்டர் பயணித்து அங்கன்வாடி ஊழியராக பணியாற்றுகிறார். இப்படி ஏராளமானோர். இவர்கள் அனைவரிடம் இருந்தும் ஒலிக்கும் ஒரே குரல், அரசுப்பேருந்தே எங்கள் வாழ்வாதாரம் என்பதுதான்.
10ஆம் வகுப்புக்கு மேல் பல மாணவிகள் உயர்கல்வி பெற வெளியூர் செல்வதற்கு உதவியாக இருப்பது அரசுப் பேருந்துதான். அரசுப் பேருந்துகள் இல்லாத இடங்களில் கல்வி வாய்ப்பு தடைபட வாய்ப்பிருக்கிறது. அப்பகுதியைப் பொறுத்தவரை பால், பருப்பு, அரிசி என அனைத்தும் அரசுப்பேருந்துகளிலேயே அனுப்பப்படுகிறது. பலர் இருசக்கர வாகனங்களை வைத்திருக்கும்போதும், பொருளாதார சேமிப்பு மற்றும் மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசுப்பேருந்தைத்தான் மக்கள் பயன்படுத்துகின்றனர். கடல்சார்ந்த பகுதியான தென்கிழக்கு தமிழகத்துக்கு வரும்போது, பிற பகுதிகளைப் போல் அங்கேயும் பெண்களின் வாழ்வில் அரசுப்பேருந்துகள் முக்கியப் பங்காற்றுகின்றன. அங்குள்ள பெண்கள் ஏராளமானோர் கடல் வலைகளை சுத்தப்படுத்தி அதில் இருந்து மீன், நண்டுகளை எடுக்கும் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் இதனை இலவசப் பயணமாக கருது வதில்லை. புதுக்கோட்டை போன்ற சமதளப் பகுதிகளுக்கு வரும் போதும் பெண்கல்வி என்ற ஒன்று அரசுப்பேருந்துகளை நம்பி மட்டுமே ஓடுவதை பார்க்க முடிகிறது. இவ்வாறாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அரசுப்பேருந்து களின் வேர், எதுவரை படர்ந்துள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த இஞ்சின் ஆப் தமிழ்நாடு. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் 500 பேர் வசிக்கும் பகுதிகளுக்கும் அரசுப்பேருந்துகள் ஓடுகிறது. 10 பேருக்காக மட்டும் 45 கிலோ மீட்டர் வரை பேருந்துகள் ஓடுகின்றன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த வீடியோ அரசுப்போக்குவரத்துத் துறையினரி டையே ஏற்படுத்திய தாக்கத்தையும் இங்கு பதிவு செய்ய வேண்டியது அவசியம். புள்ளிவிவரங்களால் படித்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்றபோது, எங்களின் வாழ்வாதா ரத்தை எளிய மக்களின் குரலாய் பல்வேறு இடங்களுக்குச் சென்று செய்தது அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது என்பது ஒன்று. தனியார்மயம் என்ற ஒன்று அரசுப்போக்குவரத்தில் புகுந்துவிடக் கூடாது என்பதன் முக்கியத்துவத்தையே இந்த ஆவணப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தமிழகத்தின் கடைக்கோடி வரை சென்று எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக மட்டுமே எந்த இடர் காலத்திலும் பணியாற்றும் அரசுப் பேருந்துகளின் அர்ப்பணிப்பு, லாப நோக்கில் மட்டும் இயங்கும் தனியார் நிறுவனத்தினரிடம் எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி யையும் நம்முன் அழுத்தமாக முன்வைக்கிறது. அதன் சுருக்கத்தை நீலகிரி ஓட்டுநர் குறிப்பிடும் இந்த கீழ்கண்ட கூற்றுடன் முடிப்பது சரியாகவும் இருக்கும்.. “4 ஸ்கூல் பசங்க இதுல தினம் வந்து போறாங்க. அவங்களுக்காகவாவது வார நாட்கள்ல விடுமுறை எடுக்காம பணிக்கு வரனும்னு நினப்போம். இரிய சிகைங்கற நீலகிரியோட இந்த இடத்துல அரசுப்பேருந்து மட்டும்தான். அதுவும் 10 பேர் தான் அங்கங்க ஏறுவாங்க. பல பகுதியில பேருந்து நிறுத்தமே இல்ல. மக்கள் கை காட்டுற இடத்துல நிறுத்துவோம். அவங்க எங்க கேக்கு றாங்களோ இறக்கி விடுவோம். முடிஞ்சளவு அவங்கள பாதுகாப்பா கொண்டு போய் விடனும்னு எப்பவும் எச்சரிக் கையா இருப்போம்.” இந்த அக்கறையும் அன்பும், லாபத்தை மட்டுமே மனதில் கொண்டு இயங்கும் தனியார் நிறுவனங்கள் கிட்ட இருந்து எதிர்பார்க்க முடியுமா??!!