tamilnadu

img

தமுஎகச விருது வழங்கும் விழா! படைப்புச் சுதந்திரம் பறிப்புக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம்!

சென்னை, ஜூன் 12- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலை ஞர்கள் சங்கத்தின் சார்பில் 2019, 2020, 2021ஆம் ஆண்டுகளுக்கான இயக்குநர்கள், கதாசிரி யர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு திரை  விருது வழங்கும் விழா பெரம்பூரில் சனிக்கிழமை (ஜூன் 11) நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், “எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அவரது ஆட்சிக்கு எதிராக விமர்சனங்கள் வருகிறது என்று ‘சூப்பர் தணிக்கை மசோதா’ கொண்டு வரப்பட்டது.  அதை எதிர்த்து தமுஎகச மிகப்பெரிய மாநாட்டை நடத்தியது.   இப்போது ஒன்றிய அரசு ‘சினிமாட்டோ கிராபி’ என்ற சட்டத்தை கொண்டு வருகிறது. அந்த சட்டம் வந்தால் கலைச் சுதந்திரம், கலை படைப்பின் சுதந்திரம் முற்றாகப் பறிக்கப்படும். அந்நிய ஆட்சிக்காலத்தில் இருந்ததைப் போன்ற  கெடுபிடிகளை அந்த சட்டத்தின் மூலம் செயல் படுத்த முயல்கிறார்கள். இந்த சட்டத்தை எதிர்த்தும் தமுஎகச களமாடிக் கொண்டி ருக்கிறது. அந்த சட்டம் புதிதாக எடுக்கப்பட்டு தணிக்கைக்கு செல்லும் சினிமாக்கள் மட்டுமல்ல, ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட படங்களாக இருந்தாலும் மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும் எனக் கூறுகிறது. எவ்வளவு மோசமாக ஜனநாயக உரிமைகளை, கருத்து சுதந்திரத்தை பறிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. எனவே கருத்து  சுதந்திரத்திற்கு எதிராக, படைப்பு சுதந்திரத்திற்கு  எதிராக கொண்டு வரப்படும் சட்டங்களை எதிர்த்து போராட அனைத்து தரப்பு மக்களும், திரைத்துறை கலைஞர்களும் முன்வர வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். ஜெய்பீம் திரைப்பட இயக்குநர் ஞானவேல் பேசுகையில், ஜெய்பீம் படம் வெளிவந்த பிறகு ஏற்பட்ட பிரச்சனைகளின் போது சிவப்பு நிறம்தான் உடன் இருந்தது. எனக்கு கட்டண மில்லாமல் வாதாடியது இடதுசாரி கட்சித் தோழர்களும், தமுஎகச தோழர்களும்தான். இந்த திரைப்படம் எடுக்கும் போது பழங்குடி யின மக்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்ற குற்ற உணர்வுதான் மேலோங்கி நின்றது. 

அதுதான் படத்தை சரியான பாதையில் நடை பெற்ற சம்பவங்களை தத்ரூபமாக முன்வைக்க உந்துசக்தியாக இருந்தது என்றார். இதுதொடக்கம்தான், இதுபோன்ற திரைப்படங்களை தொடர்ச்சியாக எடுப்பேன். இதுபோன்ற நல்ல சிந்தனைகளை முன்னிறுத்தி சினிமா எடுப்பதற்கு தமுஎகச- இடதுசாரி மேடை களே முக்கிய காரணம். சிலப்பதிகாரம் எடுத்துக் கொண்டால் அது ஏதோ கண்ணகி பத்தினி பற்றிய கதை என பெரும்பாலோனோர் புரிந்துகொள் வோம். ஆனால் இடதுசாரி சிந்தனை கொண்ட  ஆய்வாளர்கள், அதை ஒரு வணிகருக்கும் அதிகாரத்திற்கும் (மன்னருக்கும்) நடைபெற்ற போர் என்று தெரிவித்தார்கள். இதுதான் இடது சாரிகளின் பார்வை. எனவே பார்வையற்ற ஒரு படைப்பு சமூகத்தில் நிற்காது. தொடர்ந்து இதுபோன்ற சினிமாக்களை எடுக்க முயற்சிப்பேன் என்றார். இயக்குநர் அதியன் ஆதிரை பேசுகையில்,  தோழர் என்ற வார்த்தையே மிக பாதுகாப்பா னது என்றார். என்னால் ஒரு பத்து திரைப்படம் எடுக்க முடியுமா என்று தெரியாது. ஆனால் நிச்சய மாக நல்ல படைப்புகளுடன் வரும் தோழர்களை  அரவணைத்து சினிமாத்துறையில் உள்ள அமைப்பை சீரமைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றார். எனக்கு நிறைய புத்த கங்களை அறிமுகப்படுத்தியது தமுஎகசதான் என்றும், தான் இடதுசாரி என்பதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார். இயக்குநர் விருமாண்டி பேசுகையில், நான் என்னுடைய வாழ்க்கையை தமுஎகச மேடையில் இருந்துதான் துவங்கினேன். நான் இயக்குநர் ஆவதற்கும் தமுஎகசதான் காரணம். எனக்குள் எப்போதும் போராட வேண்டும் என்ற குணம் இருந்து கொண்டேதான் இருக்கும்.  வரும்காலங்களிலும் சமூக பிரச்சனைகள் குறித்த படங்களை எடுப்பேன் என்றார்.

இயக்குநர் பிராங்ளின் பேசுகையில், கருத்து சுதந்திரம், படைப்பு சுதந்திரம் பாதிக்கப் படும் போதெல்லாம் அதை எதிர்த்து குரல்  கொடுப்பது தமுஎகசதான் என்று பெருமிதத்து டன் கூறினார். விழாவை நிறைவு செய்து தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசுகையில், “அறிவியல்பூர்வமற்ற கருத்துகளை பேசு பவர்களுக்கு, மூட நம்பிக்கைகளை வளர்ப்பவர் களுக்கு, பெண்களை பாலியல் ரீதியாக இழிவு படுத்திக் கூடியவர்களுக்கு நாட்டில் சுதந்திரம் உள்ளது.  ஆனால் முற்போக்கான திசைவழி யில் சமூகத்தை கட்டியமைக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு, கடந்த கால வரலாற்றின் மீது விமர்சனங்களை முன்வைக்கிறவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது. சாதி ஒழிப்புக்கான சமத்து வத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது. சமூக அக்கறையுடன் செயல் படும் இயக்குநர்களுக்கு தமுஎகச என்றும் உறுதுணையாக இருக்கும்” என்று கூறினார். தேன் திரைப்பட தயாரிப்பாளர் பிரேமாவும் பேசினார். முன்னதாக ஜெய்பீம், ரைட்டர், தேன்  ஆகிய படங்கள் குறித்து களப்பிரன் பேசி னார். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, க/பெ. ரணசிங்கம், கே.டி.(எ) கருப்புதுரை ஆகிய திரைப்படங்கள் குறித்து கி.அன்பரசன் பேசினார். டூலெட், அசுரன், கர்ணன் ஆகிய படங்கள் குறித்து பிரளயன் பேசினார்.   முன்னதாக வடசென்னை மாவட்டச் செயலாளர் மணிநாத் வரவேற்றார். பொருளாளர் பா.ஹேமாவதி நன்றி கூறினார். செல்லங்குப்பம் சுப்பிரமணி இசைக்குழுவின் பாடல்களும், மாற்று ஊடக மையத்தின் பறையாட்டமும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தன.