tamilnadu

img

பாசிச, மதவாத தாக்குதலை எதிர்கொள்ள ஒன்றிணைவோம்!

பாசிச, மதவாத தாக்குதலை எதிர்கொள்ள ஒன்றிணைவோம்!

        கைது செய்யப்பட்ட ஜாமியா மாணவர்கள் 12 மணிநேரத்திற்கு பிறகு விடுதலை

                 தில்லி ஒக்லா நகரில் உள்ளது ஜாமியா மிலியா இஸ்லா மியா மத்திய பல்கலைக்கழ கம். இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க யூனிட் தலைவ ரும் (எஸ்எப்ஐ), இந்திய மாணவர் சங்க தில்லி மாநிலக்குழு உறுப்பி னருமான சாகி மற்றும் 5 மாணவச் செயற்பாட்டாளர்களுக்கு எதி ராக புதன்கிழமை அன்று (பிப்ர வரி 12ஆம் தேதி) நள்ளிரவில் பல் கலைக்கழக நிர்வாகம் இடைநீக்க நோட்டீஸ் அனுப்பியது. 

இதற்கு எதிராக மாணவர்களின்  போராட்டத்தை தடுக்கும் வகை யில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தில்லி காவல்துறை அடாவடியாக ஜாமியா பல்க லைக்கழகத்திற்குள் புகுந்து இடைநீக்க நோட்டீஸ் பெற்ற மாண வர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல மாணவர்களை கைது செய்தது.

12 மணிநேர காவல்...

இந்திய மாணவர் சங்கத்தி னரின் தொடர் போராட்டத்தால்,  சட்ட விரோதமாக கைது செய்யப் பட்ட மாணவர்களை கடும் மன அழுத்தத்திற்கு உண்டாக்கி 12 மணிநேரத்திற்குப் பிறகு தில்லி காவல்துறை விடுவித்துள்ளது.  இந்நிலையில், இந்த கைது நட வடிக்கையை கண்டித்தும் பாசிச, மதவாத தாக்குதலை எதிர்கொள்ள  ஒன்றிணைந்து போராடுவோம் என அகில இந்திய மாணவர்கள் சம்மே ளனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மாணவர்கள் மீதான கைது நடவடிக்கை ஜாமியா பல்கலைக்கழக முதன்மை பொ றுப்பாளர் நவேத் ஜமால் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட துணை வேந்தர் மஸ்ஹர் ஆசிப் ஆகியோ ரின் மூலம் முன்னெடுக்கப்பட்டது ஆகும். அவர்கள் இருவரும் கூட்டாக பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் உணர்வுகளை அடக்க முயற்சித்து வருகின்றனர். மாணவர்களின் கைது தொடர்பான கேள்விகளுக்கும், எந்த காவல் நிலையத்தில் இருக்கிறார்கள் என்பது தொடர்பாகவும் குடும்பத்தி னருக்கு தகவல் தெரிவிக்கவும் தில்லி காவல்துறையினர் மறுத்த னர்.

ஜாமியா நிர்வாகம் மாணவர் களின் அடிப்படை மனித உரிமைக ளான குடிநீர், உணவு, மின்சாரம் கழிப்பறைகள் முதலியவை மறுக் கப்பட்டதன் காரணமாகவே போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் தில்லி பாஜக அரசாங் கம், காவல்துறை, பல்கலைக்கழக நிர்வாகம் ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் ஜனநாயகத்தை நடத்தும் முறை, மன மற்றும் உடல் மீதான வன்முறை, ரகசிய தந்திரோபாயங்கள் மூலம் அதை முற்றிலும் அடக்க முயற்சிப்பது தெளிவாக தெரிகிறது. 

மதவாத தாக்குதலுக்கு எதிராக போராடுவோம்...

மாணவர்கள் மீதான அடக்கு முறை ஜாமியா நிர்வாகம் மற்றும் தில்லி காவல்துறைக்கு புதியது அல்ல என்றாலும், தற்போது கைது நடவடிக்கை மூலம் ஜாமியா மாண வர்கள் எதிர்கொண்ட மன அழுத் தம் மற்றும் வன்முறையின் அளவு ஒரு புதிய தாழ்நிலையை அடைந் துள்ளது. 12 மணிநேரத்திற்கும் மேலாக மாணவர்கள் இந்திய  தேசிய தலைநகரின் முகத்திலிரு ந்து அதாவது முற்றிலும் மறைக் கப்பட்டனர்.

மாணவர்களின் குரல்களை குற்றமாக்குவது மற்றும் மாணவர் கள், ஆர்வலர்கள் மீது வன்முறை யான தண்டனைகளை வழங்கு வது, ஒவ்வொரு ஜனநாயகத்தை நேசிக்கும் குடிமகனாலும் கடுமை யாக எதிர்க்கப்பட வேண்டும்.  ஜாமியா மாணவர்கள் குற்றச்சாட்டு கள் மூலம் மிரட்டப்பட்டாலும் தங்கள் போராட்டத்தைத் தொடர மாணவர்களுக்கும், தோழர்க ளுக்கும் அகில இந்திய மாண வர்கள் சம்மேளனம் (ஏஐஎஸ்ஏ) அழைப்பு விடுக்கிறது. நமது நாட்டின் முக்கியமான மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜாமியா மிலியா இஸ்லாமியா நிறு வனத்தின் மீது பாசிச மற்றும் மதவாத தாக்குதலை எதிர்கொள்ள நாம் ஒன்றிணைந்து போராடுவோம் என உறுதிபூண்கிறோம்” என அதில் கூறப்பட்டுள்ளது.